டெல்லி: பிரச்சினை எதுவோ அதுகுறித்து மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு நமது நோக்கம் திசை திரும்பி விடக் காரணமாக இருக்கக் கூடாது என்று ராகுல் காந்திக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் விவகாரத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. இந்த நிலையில் தகுதி நீக்கத்திற்குப் பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஏன் நீங்கள் உங்களது கருத்துக்காக மன்னிப்பு கேட்க தயங்குகிறீர்கள் என்ற செய்தியாளர் கேள்விக்கு, நான் சாவர்க்கர் இல்லை, காந்தி என்று பதிலளித்திருந்தார் ராகுல் காந்தி.
இந்த விவகாரம் தற்போது காங்கிரஸ் கூட்டணிக்குள் அனலைக் கிளப்பியுள்ளது. உத்தவ் தாக்கரே, ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போல. அவரை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் உத்தவ் தாக்கரே. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் 18 கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தின.
அப்போது சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியுடனும் சரத் பவார் சில முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து தவறு என்று அப்போது சரத் பவார் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
பவார் கூறுகையில்உணர்வுப்பூர்வமான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சிவசேனா கட்சியினருக்கு வீர சாவர்க்கர் முக்கியமானவர். எனவே அவர்களைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.
மகாராஷ்டிராவில் சாவர்க்கர் மதிக்கப்படுகிறார், போற்றப்படுகிறார். எனவே அவரது பெயரை தவறாக பயன்படுத்துவது நமக்கு எதிராகப் போய் விடும். சாவர்க்கர் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்ததில்லை. நமது உண்மையான போராட்டம் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிரானதாகத்தான் இருக்க வேண்டும்.
ஜனநாயகப் பிரச்சினைகள் குறித்துத்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். சர்ச்சைகள் நம்மை பிரச்சினையிலிருந்து திசை திருப்பிவிடும். நாம் உணர்வுப்பூர்வமாக பேசுவதை விட உண்மையான பிரச்சினைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தினால் நல்லது என்றார் சரத் பவார். அவரது கருத்தை காங்கிரஸ் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனராம். சாவர்க்கர் குறித்த தங்களது வேகத்தைக் குறைத்துக் கொள்வதாகவும் அவர்கள் பவாரிடம் கூறினார்களாம்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}