மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் கிங் படத்தின் ஷூட்டிங்கின்போது காயம் அடைந்துள்ளார். அவர் ஒரு மாத காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தப் படத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானாவும் இணைந்து நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. மும்பையில் நடந்த படப்பிடிப்பின்போது தான் ஷாருக் கானுக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.
தற்போது ஷாருக் கான் அமெரிக்கா சென்று சிகிச்சை பெறுகிறார். படத்தில் தீபிகா படுகோன், ராணி முகர்ஜி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சண்டைக் காட்சியின்போது ஷாருக் கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மும்பை கோல்டன் டொபாக்கோ ஸ்டுடியோவில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஷாருக்கானின் காலில் கடுமையான தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், என்ன மாதிரியான காயம் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

ஷாருக் கானுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அடுத்த படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கும். அவர் குணமடைந்த பிறகு முழு பலத்துடன் வருவார் என்று படக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். பதான் படத்தை சித்தார்த் ஆனந்த்தான் இப்போது கிங் படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!
{{comments.comment}}