- ஷீலா ராஜன்
அவள் விலகிய தருணம்
யாரோ
தங்கள் உண்மை முகத்தை
அவளின் முன்
அறியாமலே காட்டிவிட்டார்கள்.
அவள் கோபப்படவில்லை,
வாதம் செய்யவில்லை,
பொய்க்கு
புதிய நிறம் பூசவும் முயலவில்லை.
ஏனெனில்

ஒருமுறை தெரிந்த உண்மை
மறைக்க முடியாதது என்பதை
அவள் அறிந்திருந்தாள்.
சொற்கள் இனிமை பேசினாலும்,
செயல்கள் கடின உண்மை பேசின,
அந்த மௌன மொழியை
அவள் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை.
மாற்றுவது
அவளின் பொறுப்பு அல்ல,
தன்னை காப்பது
அவளின் உரிமை.
பொறுமையின் பெயரில்
தன்னை இழப்பது அல்ல,
அறிவின் பெயரில்
விலகுவதுதான்
அவளின் தேர்வு.
அவள் விலகியதை
பலர் பலவீனம் என்றார்கள்,
ஆனால் அவள் அறிந்திருந்தாள்—
உண்மை தெரிந்த பின்
அமைதியாக நடந்து செல்லுதல்
ஒரு பெண்ணின்
அதிகமான வலிமை.
அவள் மௌனம்
தோல்வி அல்ல,
அது அவளின்
சுயமரியாதையின் குரல்.
இழந்ததை அல்ல,
அவளின் வெற்றி.
உண்மை தெரிந்த பின்
திரும்பிப் பார்க்காமல்
நிமிர்ந்து நடக்கும்
அவள்—
யாரையும் வெல்லவில்லை,
ஆனால்
தன்னை மட்டும்
ஒருபோதும் இழக்கவில்லை
அவளுக்கு அவள் மட்டுமே தோழி!
கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் எதிரொலி.. பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்
என் மகன் சாதித்து விட்டார்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்தின் தாயார் பெருமிதம்
நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்
இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு
அனாதைகள் யாருடைய குழந்தைகள்???
நன்றொன்று உண்டென்று
சிறிதாய் இருந்தது பெரிதாகி விட்டது.. வீடு காலி!
பணத்தை வென்ற பாசம்!
{{comments.comment}}