- ஷீலா ராஜன்
அவள் விலகிய தருணம்
யாரோ
தங்கள் உண்மை முகத்தை
அவளின் முன்
அறியாமலே காட்டிவிட்டார்கள்.
அவள் கோபப்படவில்லை,
வாதம் செய்யவில்லை,
பொய்க்கு
புதிய நிறம் பூசவும் முயலவில்லை.
ஏனெனில்

ஒருமுறை தெரிந்த உண்மை
மறைக்க முடியாதது என்பதை
அவள் அறிந்திருந்தாள்.
சொற்கள் இனிமை பேசினாலும்,
செயல்கள் கடின உண்மை பேசின,
அந்த மௌன மொழியை
அவள் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை.
மாற்றுவது
அவளின் பொறுப்பு அல்ல,
தன்னை காப்பது
அவளின் உரிமை.
பொறுமையின் பெயரில்
தன்னை இழப்பது அல்ல,
அறிவின் பெயரில்
விலகுவதுதான்
அவளின் தேர்வு.
அவள் விலகியதை
பலர் பலவீனம் என்றார்கள்,
ஆனால் அவள் அறிந்திருந்தாள்—
உண்மை தெரிந்த பின்
அமைதியாக நடந்து செல்லுதல்
ஒரு பெண்ணின்
அதிகமான வலிமை.
அவள் மௌனம்
தோல்வி அல்ல,
அது அவளின்
சுயமரியாதையின் குரல்.
இழந்ததை அல்ல,
அவளின் வெற்றி.
உண்மை தெரிந்த பின்
திரும்பிப் பார்க்காமல்
நிமிர்ந்து நடக்கும்
அவள்—
யாரையும் வெல்லவில்லை,
ஆனால்
தன்னை மட்டும்
ஒருபோதும் இழக்கவில்லை
அவளுக்கு அவள் மட்டுமே தோழி!
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}