- ஷீலா ராஜன்
அவள் விலகிய தருணம்
யாரோ
தங்கள் உண்மை முகத்தை
அவளின் முன்
அறியாமலே காட்டிவிட்டார்கள்.
அவள் கோபப்படவில்லை,
வாதம் செய்யவில்லை,
பொய்க்கு
புதிய நிறம் பூசவும் முயலவில்லை.
ஏனெனில்

ஒருமுறை தெரிந்த உண்மை
மறைக்க முடியாதது என்பதை
அவள் அறிந்திருந்தாள்.
சொற்கள் இனிமை பேசினாலும்,
செயல்கள் கடின உண்மை பேசின,
அந்த மௌன மொழியை
அவள் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை.
மாற்றுவது
அவளின் பொறுப்பு அல்ல,
தன்னை காப்பது
அவளின் உரிமை.
பொறுமையின் பெயரில்
தன்னை இழப்பது அல்ல,
அறிவின் பெயரில்
விலகுவதுதான்
அவளின் தேர்வு.
அவள் விலகியதை
பலர் பலவீனம் என்றார்கள்,
ஆனால் அவள் அறிந்திருந்தாள்—
உண்மை தெரிந்த பின்
அமைதியாக நடந்து செல்லுதல்
ஒரு பெண்ணின்
அதிகமான வலிமை.
அவள் மௌனம்
தோல்வி அல்ல,
அது அவளின்
சுயமரியாதையின் குரல்.
இழந்ததை அல்ல,
அவளின் வெற்றி.
உண்மை தெரிந்த பின்
திரும்பிப் பார்க்காமல்
நிமிர்ந்து நடக்கும்
அவள்—
யாரையும் வெல்லவில்லை,
ஆனால்
தன்னை மட்டும்
ஒருபோதும் இழக்கவில்லை
அவளுக்கு அவள் மட்டுமே தோழி!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}