- ஷீலா ராஜன்
அவள் விலகிய தருணம்
யாரோ
தங்கள் உண்மை முகத்தை
அவளின் முன்
அறியாமலே காட்டிவிட்டார்கள்.
அவள் கோபப்படவில்லை,
வாதம் செய்யவில்லை,
பொய்க்கு
புதிய நிறம் பூசவும் முயலவில்லை.
ஏனெனில்

ஒருமுறை தெரிந்த உண்மை
மறைக்க முடியாதது என்பதை
அவள் அறிந்திருந்தாள்.
சொற்கள் இனிமை பேசினாலும்,
செயல்கள் கடின உண்மை பேசின,
அந்த மௌன மொழியை
அவள் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை.
மாற்றுவது
அவளின் பொறுப்பு அல்ல,
தன்னை காப்பது
அவளின் உரிமை.
பொறுமையின் பெயரில்
தன்னை இழப்பது அல்ல,
அறிவின் பெயரில்
விலகுவதுதான்
அவளின் தேர்வு.
அவள் விலகியதை
பலர் பலவீனம் என்றார்கள்,
ஆனால் அவள் அறிந்திருந்தாள்—
உண்மை தெரிந்த பின்
அமைதியாக நடந்து செல்லுதல்
ஒரு பெண்ணின்
அதிகமான வலிமை.
அவள் மௌனம்
தோல்வி அல்ல,
அது அவளின்
சுயமரியாதையின் குரல்.
இழந்ததை அல்ல,
அவளின் வெற்றி.
உண்மை தெரிந்த பின்
திரும்பிப் பார்க்காமல்
நிமிர்ந்து நடக்கும்
அவள்—
யாரையும் வெல்லவில்லை,
ஆனால்
தன்னை மட்டும்
ஒருபோதும் இழக்கவில்லை
அவளுக்கு அவள் மட்டுமே தோழி!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
கரூர் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்? பரபரக்கும் அரசியல் களம்
பஞ்சமி திதியில் வரும் வசந்த பஞ்சமி.. மிக மிக சிறப்பு!
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
டைப்ரைட்டிங் கீபோர்டில்.. எழுத்துக்கள் ஏன் மாறி மாறி இருக்கு தெரியுமா?
சித்திரம் பேசுதடி (சிறுகதை)
அம்மா!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
{{comments.comment}}