பாக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் சிக்கிக் கொண்டார். இதில் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த அனைவரும் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது 65 வயது தாயார் மரியா கார்மல் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, பாலையூர் அருகே இவர்களது கார் லாரி மீது மோதியதாகத் தெரிகிறது. பாலக்கோடு காவல்துறையின் கூற்றுப்படி, கார் லாரியின் பின்னால் மோதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மலையாளத்தில் பல்வேறு விதமான ரோல்களில் நடித்துப் பிரபலமானவர் ஷைன் டாம் சாக்கோ. தமிழிலும் கூட பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட அவர் பாலியல் அத்துமீறல் புகாரிலும் சிக்கி கைதாகி பின்னர் விடுதலையானார் என்பது நினைவிருக்கலாம்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}