பாக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் சிக்கிக் கொண்டார். இதில் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த அனைவரும் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது 65 வயது தாயார் மரியா கார்மல் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, பாலையூர் அருகே இவர்களது கார் லாரி மீது மோதியதாகத் தெரிகிறது. பாலக்கோடு காவல்துறையின் கூற்றுப்படி, கார் லாரியின் பின்னால் மோதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மலையாளத்தில் பல்வேறு விதமான ரோல்களில் நடித்துப் பிரபலமானவர் ஷைன் டாம் சாக்கோ. தமிழிலும் கூட பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட அவர் பாலியல் அத்துமீறல் புகாரிலும் சிக்கி கைதாகி பின்னர் விடுதலையானார் என்பது நினைவிருக்கலாம்.
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தொடக்கம்!
{{comments.comment}}