கோவை: கோவையில் உள்ள கே எம் சி எச் மருத்துவமனையில் ஒருவர் திருடன் முயன்றதாக கூறி, மருத்துவமனை ஊழியர்களே அவரை அடித்து கொலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தற்போது கோவை தாந்திமா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜா கோவை அடையாற்று சாலையில் உள்ள கே எம் சி எச் மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை காவலாளிகள் தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த ராஜா மயக்கமடைந்தார். பின்னர் பதற்றம் அடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் அவரை அதே மருத்துவமனையில் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜா உயிரிழந்துள்ளார்.இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து ராஜாவின் மனைவி தன் கணவரின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையர் ஸ்டாலின் தலைமையில், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ராஜா அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பின்னர் கே எம் சி எச் மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், மருத்துவமனை ஊழியர்கள், காவலாளி உட்பட 15 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜாவின் குடும்பத்தார், ராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அப்போது அங்கு அவரை தவறுதலாக தாக்கி கொலை செய்யப்பட்டதாகவும், கூறி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் ராஜா அடித்து தான் கொலை செய்யப்பட்டாரா அல்லது என்ன காரணத்திற்காக மருத்துவமனைக்குள் வந்தார் என்ற விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ESI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று மதியத்திற்கு மேல் தெரியவரும். அப்போது ராஜா எப்படி இறந்தார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}