கோவை மருத்துவமனையில் ஒருவரை அடித்துக் கொலை.. காரணம் என்ன.. போலீஸ் விசாரணை!

May 29, 2024,05:55 PM IST

கோவை:   கோவையில் உள்ள கே எம் சி எச் மருத்துவமனையில் ஒருவர் திருடன் முயன்றதாக கூறி, மருத்துவமனை ஊழியர்களே அவரை அடித்து கொலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தற்போது கோவை தாந்திமா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜா கோவை அடையாற்று சாலையில் உள்ள கே எம் சி எச் மருத்துவமனைக்குள்  புகுந்து அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை காவலாளிகள் தடுத்து நிறுத்தி  சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த ராஜா  மயக்கமடைந்தார். பின்னர் பதற்றம் அடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் அவரை அதே மருத்துவமனையில் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜா உயிரிழந்துள்ளார்.இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 




இதனை தொடர்ந்து ராஜாவின் மனைவி தன் கணவரின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில்  கோவை மாநகர காவல் ஆணையர் ஸ்டாலின் தலைமையில், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ராஜா அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.


பின்னர்  கே எம் சி எச் மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், மருத்துவமனை ஊழியர்கள், காவலாளி உட்பட 15 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்களை  கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜாவின் குடும்பத்தார், ராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அப்போது அங்கு அவரை தவறுதலாக தாக்கி கொலை செய்யப்பட்டதாகவும், கூறி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் ராஜா அடித்து தான் கொலை செய்யப்பட்டாரா அல்லது என்ன காரணத்திற்காக மருத்துவமனைக்குள் வந்தார் என்ற விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ESI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று மதியத்திற்கு மேல் தெரியவரும். அப்போது ராஜா எப்படி இறந்தார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

அதிகம் பார்க்கும் செய்திகள்