கோவை மருத்துவமனையில் ஒருவரை அடித்துக் கொலை.. காரணம் என்ன.. போலீஸ் விசாரணை!

May 29, 2024,05:55 PM IST

கோவை:   கோவையில் உள்ள கே எம் சி எச் மருத்துவமனையில் ஒருவர் திருடன் முயன்றதாக கூறி, மருத்துவமனை ஊழியர்களே அவரை அடித்து கொலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தற்போது கோவை தாந்திமா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜா கோவை அடையாற்று சாலையில் உள்ள கே எம் சி எச் மருத்துவமனைக்குள்  புகுந்து அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை காவலாளிகள் தடுத்து நிறுத்தி  சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த ராஜா  மயக்கமடைந்தார். பின்னர் பதற்றம் அடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் அவரை அதே மருத்துவமனையில் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜா உயிரிழந்துள்ளார்.இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 




இதனை தொடர்ந்து ராஜாவின் மனைவி தன் கணவரின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில்  கோவை மாநகர காவல் ஆணையர் ஸ்டாலின் தலைமையில், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ராஜா அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.


பின்னர்  கே எம் சி எச் மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், மருத்துவமனை ஊழியர்கள், காவலாளி உட்பட 15 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்களை  கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜாவின் குடும்பத்தார், ராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அப்போது அங்கு அவரை தவறுதலாக தாக்கி கொலை செய்யப்பட்டதாகவும், கூறி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் ராஜா அடித்து தான் கொலை செய்யப்பட்டாரா அல்லது என்ன காரணத்திற்காக மருத்துவமனைக்குள் வந்தார் என்ற விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ESI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று மதியத்திற்கு மேல் தெரியவரும். அப்போது ராஜா எப்படி இறந்தார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்