ஆப்கானிஸ்தான் போட்டி.. சுப்மன் கில் விளையாட மாட்டார்.. பிசிசிஐ அறிவிப்பு

Oct 09, 2023,04:39 PM IST
டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவுடன் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை. இந்தப் போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. இந்தியா அடுத்து ஆப்கானிஸ்தானுடன் விளையாடவுள்ளது. இப்போட்டியிலும் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில்லுக்குப் பதிலாக இஷான் கிஷான் சேர்க்கப்பட்டார். ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷான் டக் அவுட் ஆகி அனைவரையும் அதிர வைத்தார்.



இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.  டெல்லியில் அக்டோபர் 11ம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. 

சுப்மன் கில் தொடர்ந்து சென்னையிலேயே தங்கியிருப்பார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்.

கில் விளையாட முடியாத நிலை தொடர்வதால், இஷான் கிஷானே, ஆப்கானிஸ்தான் போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கலாம் என்று தெரிகிறது.  அதேபோல ஷிரேயாஸ் அய்யரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவரும் கூட டக் அவுட் ஆனது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்