சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... மாஸ்க் கட்டாயம்

Dec 24, 2023,09:31 AM IST

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் மாஸ்க் அணிவது அந்நாட்டில் கட்டாயமாக்கப்பட உள்ளதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் mயே குங் (ong ye kung) தெரிவித்துள்ளார்.


கடந்த நான்கு வாரங்களாக சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நவம்பர் 12 முதல் 18 வரையிலான காலத்தில் 10,726 ஆக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை டிசம்பர் 10 முதல் 16 வரையிலான காலத்தில் 58,300 ஆக அதிகரித்துள்ளது. இந்த முறை சிங்கப்பூரில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என அங்குள்ள ஆசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதாக சொல்லப்படுகிறது.




தற்போது வரப்போகும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் கொரோனா பரவலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சிங்கப்பூர் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மாஸ்க் அணிவது கட்டாயம். உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். சரியான தேதியில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் அல்லது உடல்நலம் குன்றியவர்கள் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். கொரொனா பரவலை பொறுத்து இனி வரும் நாட்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும். கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வைத்துக் கொள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதே சமயம் கடந்த 7 நாட்களில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின் படி சிங்கப்பூரில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. டிசம்பர் 17 ம் தேதி கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7730 ஆக இருந்த நிலையில், டிசம்பர் 18ம் தேதி 6820 ஆகவும், டிசம்பர் 19ல் இது 6530 ஆகவும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 


பொது இடங்களிலும், போக்குவரத்தின் போதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொரோனா பரவலை பொறுத்து மற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும்  ஓங் யே குங் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் வீரியம் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டு காலம் (அதாவது 18 மாதங்கள்) மட்டுமே நம்முடைய உடலில் இருக்கும் என்பதால், ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்