சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... மாஸ்க் கட்டாயம்

Dec 24, 2023,09:31 AM IST

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் மாஸ்க் அணிவது அந்நாட்டில் கட்டாயமாக்கப்பட உள்ளதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் mயே குங் (ong ye kung) தெரிவித்துள்ளார்.


கடந்த நான்கு வாரங்களாக சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நவம்பர் 12 முதல் 18 வரையிலான காலத்தில் 10,726 ஆக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை டிசம்பர் 10 முதல் 16 வரையிலான காலத்தில் 58,300 ஆக அதிகரித்துள்ளது. இந்த முறை சிங்கப்பூரில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என அங்குள்ள ஆசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதாக சொல்லப்படுகிறது.




தற்போது வரப்போகும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் கொரோனா பரவலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சிங்கப்பூர் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மாஸ்க் அணிவது கட்டாயம். உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். சரியான தேதியில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் அல்லது உடல்நலம் குன்றியவர்கள் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். கொரொனா பரவலை பொறுத்து இனி வரும் நாட்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும். கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வைத்துக் கொள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதே சமயம் கடந்த 7 நாட்களில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின் படி சிங்கப்பூரில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. டிசம்பர் 17 ம் தேதி கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7730 ஆக இருந்த நிலையில், டிசம்பர் 18ம் தேதி 6820 ஆகவும், டிசம்பர் 19ல் இது 6530 ஆகவும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 


பொது இடங்களிலும், போக்குவரத்தின் போதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொரோனா பரவலை பொறுத்து மற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும்  ஓங் யே குங் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் வீரியம் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டு காலம் (அதாவது 18 மாதங்கள்) மட்டுமே நம்முடைய உடலில் இருக்கும் என்பதால், ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்