கேபிள் போடும்போது விபத்து.. ஊழியர் பலி..  சிங்கப்பூர் தமிழருக்கு 18 வாரம் சிறை!

Sep 07, 2023,03:56 PM IST
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கேபிள் பதிக்கும் பணியின்போது போர்க்லிப்ட் வாகனத்தின் மூலம் விபத்தை ஏற்படுத்தி சக ஊழியரின் மரணத்திற்குக் காரணமான இந்திய வம்சாவளி தமிழருக்கு 18 வார கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஆசியாபில்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் அழகப்பன் கணேசன். இவர் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவர். கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம5ம் தேதி தான் வேலை பார்த்து வந்த இடத்தில் தான் இயக்கிய போர்க்லிப்ட் வாகனத்தை கவனக்குறைவாக இயக்கியதால் அதில் சிக்கி குஞ்சப்பா மகேஷ் என்ற இன்னொரு இந்தியத் தொழிலாளரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்து விட்டார் கணேசன்.



இதையடுத்து கணேசன் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் தற்போது கணேசனுக்கு 18 வார கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பல அடுக்கு கார் பார்க்கிங் பகுதியில் இவர்கள் கேபிள் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேபிள் ஒன்று போர்க்லிப்ட் மீது விழவிருந்தது. இதைப் பார்த்த குஞ்சப்பா மகேஷும், இன்னொரு ஊழியரும் வேகமாக கேபிளை தூக்கி மறுபக்கம் போட முயன்றனர். ஆனால் அந்த கேபிள் போர்க்பில்ட் வாகனத்தின் கியர் மீது விழுந்து அது வேகமாக வந்து குஞ்சப்பா மகேஷ் மீது மோதி அதில் அவர் உயிரிழந்து விட்டார்.

கணேசனைக் காப்பாற்ற கேபிளைத் தூக்கிப் போட்டார் குஞ்சப்பா மகேஷ்.. ஆனால் விதி இடையில் குறுக்கிட்டு அவரது உயிரைப் பறித்து விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

news

கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!

news

கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்