- அ. தாமஸ்
இன்றைய எதிர்பார்ப்புகளே நாளைய மகிழ்வைத் தீர்மானிக்கிறது. விதைக்காத இடத்தில் பலனை எதிர்பார்க்கும் பொழுதே எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகின்றன.
நம் மதிப்புத் தெரியாத இடத்தில் மதிப்பையும், நம் அன்பை அளக்கத் தெரியாத இடத்தில் அன்பையும் எதிர்பார்ப்பது தான் நம் நிம்மதியை சிதைத்து நம் மனதை ரணமாக்குகிறது. எனவே நம்மை நினைப்பவரை மதிப்போம், மறுப்பவரை மறப்போம்.
எதிர்பார்ப்புகளே பல நேரங்களில் மாற்றங்களையும் சில நேரங்களில் ஏமாற்றங்களையும் பரிசளிக்கிறது. எனவே எதிர்பார்ப்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.

நம் வாழ்விடத்தின் சொர்க்கமே எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வதுதான். ஆனால் அத்தகு வாழ்வைக் கூட நாம் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறதே.
பல நேரங்களில் தகுதியான எதிர்பார்ப்புகளே நாளைய நாளுக்கு நம்மைத் தகுதிப்படுத்தி நிறை மகிழ்வையும்,மனநிறைவையும் கூட நமதாக்குகிறது.
நாளைய வெற்றிக்கு கடின உழைப்பும், தகுதியான எதிர்பார்ப்புமே தலையாய காரணிகள். எனவே தகுதியானதை எதிர்பார்த்து தன் முனைப்போடு தலை நிமிர்வோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
Summer special Mango Icecream.. மாம்பழ ஐஸ்க்ரீ்ம்.. கேட்கவே ஸ்வீட்டா இருக்குல்ல!
சிந்தனைச் சிதறல்.. இன்றைய எதிர்பார்ப்புகளே நாளைய மகிழ்வைத் தீர்மானிக்கும்!
மேம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அவளின் (ல்) அவன்! (16)
Things We Can Learn from CM Vijay.. முதல்வர் விஜய்யிடமிருந்து நாம் கத்துக்க வேண்டியவை!
Tamil Short Story: 10 ரூபாய்க்கு 13 லட்சம்!
Time is Borrowed, Use It Well.. நேரம் உங்களுக்காக எப்போதும் காத்திருக்காதுங்க!
When life is easy thank God When life is tough trust in God.. கடவுளைத் திட்டாதீங்கப்பா!
சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
தற்காலிக ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?
{{comments.comment}}