சிந்தனைச் சிதறல்.. இன்றைய எதிர்பார்ப்புகளே நாளைய மகிழ்வைத் தீர்மானிக்கும்!

May 19, 2026,11:47 AM IST

- அ. தாமஸ்


இன்றைய எதிர்பார்ப்புகளே நாளைய மகிழ்வைத் தீர்மானிக்கிறது. விதைக்காத இடத்தில் பலனை எதிர்பார்க்கும் பொழுதே எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகின்றன.


நம் மதிப்புத் தெரியாத இடத்தில் மதிப்பையும், நம் அன்பை அளக்கத் தெரியாத இடத்தில் அன்பையும் எதிர்பார்ப்பது தான் நம் நிம்மதியை சிதைத்து நம் மனதை ரணமாக்குகிறது. எனவே நம்மை நினைப்பவரை மதிப்போம், மறுப்பவரை மறப்போம்.


எதிர்பார்ப்புகளே பல நேரங்களில் மாற்றங்களையும் சில நேரங்களில் ஏமாற்றங்களையும் பரிசளிக்கிறது. எனவே எதிர்பார்ப்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.




நம் வாழ்விடத்தின் சொர்க்கமே எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வதுதான். ஆனால் அத்தகு வாழ்வைக் கூட நாம் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறதே.


பல நேரங்களில் தகுதியான எதிர்பார்ப்புகளே நாளைய நாளுக்கு நம்மைத் தகுதிப்படுத்தி நிறை மகிழ்வையும்,மனநிறைவையும் கூட நமதாக்குகிறது.


நாளைய வெற்றிக்கு கடின உழைப்பும், தகுதியான எதிர்பார்ப்புமே தலையாய காரணிகள். எனவே தகுதியானதை எதிர்பார்த்து தன் முனைப்போடு தலை நிமிர்வோம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்