- அ. தாமஸ்
இன்றைய எதிர்பார்ப்புகளே நாளைய மகிழ்வைத் தீர்மானிக்கிறது. விதைக்காத இடத்தில் பலனை எதிர்பார்க்கும் பொழுதே எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகின்றன.
நம் மதிப்புத் தெரியாத இடத்தில் மதிப்பையும், நம் அன்பை அளக்கத் தெரியாத இடத்தில் அன்பையும் எதிர்பார்ப்பது தான் நம் நிம்மதியை சிதைத்து நம் மனதை ரணமாக்குகிறது. எனவே நம்மை நினைப்பவரை மதிப்போம், மறுப்பவரை மறப்போம்.
எதிர்பார்ப்புகளே பல நேரங்களில் மாற்றங்களையும் சில நேரங்களில் ஏமாற்றங்களையும் பரிசளிக்கிறது. எனவே எதிர்பார்ப்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.

நம் வாழ்விடத்தின் சொர்க்கமே எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வதுதான். ஆனால் அத்தகு வாழ்வைக் கூட நாம் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறதே.
பல நேரங்களில் தகுதியான எதிர்பார்ப்புகளே நாளைய நாளுக்கு நம்மைத் தகுதிப்படுத்தி நிறை மகிழ்வையும்,மனநிறைவையும் கூட நமதாக்குகிறது.
நாளைய வெற்றிக்கு கடின உழைப்பும், தகுதியான எதிர்பார்ப்புமே தலையாய காரணிகள். எனவே தகுதியானதை எதிர்பார்த்து தன் முனைப்போடு தலை நிமிர்வோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}