சென்னை: சமீபகாலமாக கதையம்சம் கொண்ட கனமான படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகர் சிவகார்த்திகேயன், மீண்டும் தனது வழக்கமான பாணியிலான காமெடி மற்றும் கமர்ஷியல் ரூட்டிற்கு திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.
மாவீரன், அமரன் போன்ற படங்கள் சிவகார்த்திகேயனின் நடிப்புத் திறமையை உலகிற்கு பறைசாற்றினாலும், அவரது பழைய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' போன்ற கலகலப்பான படங்களை மிஸ் செய்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தனது அடுத்த படம் ஒரு பக்காவான 'ஃபேமிலி என்டர்டெய்னர்' ஆக இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
வித்தியாசமான கதைகளில் நடிப்பது மகிழ்ச்சி என்றாலும், மக்கள் திரையரங்கிற்கு வந்து வாய்விட்டு சிரித்து மகிழ்வதை பார்க்கவே நான் விரும்புகிறேன். எனவே, எனது அடுத்த படம் முழுக்க முழுக்க காமெடி, பாடல்கள் மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு கொண்டாட்டமாக இருக்கும்

தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் (SK23) நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி அல்லது சுதா கொங்கரா ஆகியோருடன் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் எந்தப் படம் அந்த 'முழு என்டர்டெய்னர்' படமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
ஒரு மிடறு!
Tamil Poem: செல்லக்குட்டி வெல்லக்கட்டி!
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
{{comments.comment}}