சென்னை: சமீபகாலமாக கதையம்சம் கொண்ட கனமான படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகர் சிவகார்த்திகேயன், மீண்டும் தனது வழக்கமான பாணியிலான காமெடி மற்றும் கமர்ஷியல் ரூட்டிற்கு திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.
மாவீரன், அமரன் போன்ற படங்கள் சிவகார்த்திகேயனின் நடிப்புத் திறமையை உலகிற்கு பறைசாற்றினாலும், அவரது பழைய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' போன்ற கலகலப்பான படங்களை மிஸ் செய்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தனது அடுத்த படம் ஒரு பக்காவான 'ஃபேமிலி என்டர்டெய்னர்' ஆக இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
வித்தியாசமான கதைகளில் நடிப்பது மகிழ்ச்சி என்றாலும், மக்கள் திரையரங்கிற்கு வந்து வாய்விட்டு சிரித்து மகிழ்வதை பார்க்கவே நான் விரும்புகிறேன். எனவே, எனது அடுத்த படம் முழுக்க முழுக்க காமெடி, பாடல்கள் மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு கொண்டாட்டமாக இருக்கும்

தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் (SK23) நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி அல்லது சுதா கொங்கரா ஆகியோருடன் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் எந்தப் படம் அந்த 'முழு என்டர்டெய்னர்' படமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}