சென்னை: சமீபகாலமாக கதையம்சம் கொண்ட கனமான படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகர் சிவகார்த்திகேயன், மீண்டும் தனது வழக்கமான பாணியிலான காமெடி மற்றும் கமர்ஷியல் ரூட்டிற்கு திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.
மாவீரன், அமரன் போன்ற படங்கள் சிவகார்த்திகேயனின் நடிப்புத் திறமையை உலகிற்கு பறைசாற்றினாலும், அவரது பழைய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' போன்ற கலகலப்பான படங்களை மிஸ் செய்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தனது அடுத்த படம் ஒரு பக்காவான 'ஃபேமிலி என்டர்டெய்னர்' ஆக இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
வித்தியாசமான கதைகளில் நடிப்பது மகிழ்ச்சி என்றாலும், மக்கள் திரையரங்கிற்கு வந்து வாய்விட்டு சிரித்து மகிழ்வதை பார்க்கவே நான் விரும்புகிறேன். எனவே, எனது அடுத்த படம் முழுக்க முழுக்க காமெடி, பாடல்கள் மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு கொண்டாட்டமாக இருக்கும்

தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் (SK23) நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி அல்லது சுதா கொங்கரா ஆகியோருடன் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் எந்தப் படம் அந்த 'முழு என்டர்டெய்னர்' படமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}