வாஷிங்டன்: அமெரிக்காவில் மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கடந்த 2 நாட்களில் 6 பெண் ஆசிரியைகள் அடுத்தடுத்து கைதாகியுள்ளது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் கென்டகியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், 16 வயதான 2 சிறார்களுடன் உறவு வைத்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
டேன்வில்லியைச் சேர்ந்த எல்லன் ஷெல் (38), ஆர்கன்சாஸைச் சேர்ந்த ஹெதர் ஹரே, ஓக்லஹாமாவைச் சேர்ந்த எமிலி ஹான்காக், ஐயாவாவைச் சேர்ந்த கிறிஸ்டன் கான்ட் (36), விர்ஜீனியாவைச் சேர்ந்த அல்லியா கெர்டமான்ட் (33), ஹன்னா மார்த் ஆகியோரே கைது செய்யப்பட்ட ஆசிரியைகள் ஆவர்.

இதில் எல்லன் ஷெல், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு சிறுவனுடனும், ஆகஸ்ட் மாதத்தில் இன்னொரு சிறுவனுடனும் உறவு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இவர் உட்லான் என்ற தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்தார்.
ஆர்கன்சாஸ் ஆசிரியை ஹெதர் ஹரே ஒரு மாணவனுடன் தவறான உறவு வைத்திருந்தது தெரிய வந்து கைது செய்யப்பட்டார். அந்த சிறுவன் மைனர் வயதுடையவன் ஆவான்.
ஆசிரியை எமிலி ஹான்காக் மாணவனுடன் கட்டாய உறவு வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் வெல்ஸ்டன் பப்ளிக் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை.
36 வயதான ஆசிரியை கிறிஸ்டன் கான்ட், சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி தனது மாணவனை திசை திருப்பி அவனுடன் உறவு வைத்துக் கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி வளாகத்திலேயே இவர் தனது செக்ஸ் உறவை வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. கிறிஸ்டின் கான்ட் ஆங்கில ஆசிரியை ஆவார். ஒரே மாணவனுடன் பள்ளி வளாகத்திற்குள் இவர் 5 முறை உறவு கொண்டுள்ளார்.
விர்ஜீனியாவைச் சேர்ந்த அல்லியா கார்டெமன்ட் பல மாதங்களாக ஒரு மாணவனுடன் உறவு வைத்துள்ளார். இவர் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கான ஆசிரியை ஆவார். இவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி ஆசிரியையான ஹன்னா மர்த் ஒரு ஜாவலின் பயிற்சியாளரும் ஆவார். இவர் கடந்த 2021ம் ஆண்டு மைனர் வயதுடைய மாணவனுடன் உறவு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 6 ஆசிரியைகள் பாலியல் புகார்களில் சிக்கி கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}