- குமரேஸ்வரி.சி
பனித்துளிகள் வானிலிருந்து விழுகின்றன,
சொல்லாமல் சொல்லும் மொழிபோல்.
உலகம் மெல்ல மௌனம் போர்த்தி,
தன்னைத் தானே கேட்கிறது.
மண் வெம்மையைத் தாங்கிக் கொள்கிறது,
மறைந்த காயங்களை மூடுவது போல.
மரங்கள் அமைதியைப் பிடித்துக்கொண்டு,
சொற்களை தரையில் விட்டுவிடுகின்றன.

காற்று மெதுவாகச் செல்லும்,
எதையும் குலைக்கக் கூடாதென்று.
பறவைகள் அருகில் சுருங்கி,
குளிரில் கனவுகளை மறைக்கின்றன.
பாதச்சுவடுகள் கூட,
பனியில் கரைந்து விடுகின்றன.
அந்த அமைதியின் நடுவே,
மனித மனம் சுவாசிக்கிறது.
பனிப்பொழிவு சொல்லும் உண்மை —
அமைதியும் கவிதைதான்.
(கவிஞர் குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்)
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
2.5 கோடி ஆதார் எண்களை முடக்கியது மத்திய அரசு...காரணம் இது தானாம்
தேர்தல் இலவச வாக்குறுதிகளுக்கு எதிரான பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
சட்டசபைத் தேர்தல் 2026.. திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியீடு: கனிமொழி எம்.பி தகவல்
Layoff: சசிதரூர் மகனை வேலையில் இருந்து நீக்கிய வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம்!
தை மாத சங்கடஹர சதுர்த்தி.. விநாயகரை வணங்கி இன்னல்கள் நீங்கி.. நலம் பெறுக!
வாழ்க்கை நமக்கு சந்தோஷத்தை கொடுப்பதற்காக அல்ல (Life is not here to make us Happy)
மோதல் போல காட்சி படுத்தி மாயம் செய்கிறாய்.. காதல் !
நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை... எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கிறார்
{{comments.comment}}