பனிப்பொழிவு!

Dec 20, 2025,12:28 PM IST

- குமரேஸ்வரி.சி


பனித்துளிகள் வானிலிருந்து விழுகின்றன,

சொல்லாமல் சொல்லும் மொழிபோல்.

உலகம் மெல்ல மௌனம் போர்த்தி,

தன்னைத் தானே கேட்கிறது.


மண் வெம்மையைத் தாங்கிக் கொள்கிறது,

மறைந்த காயங்களை மூடுவது போல.

மரங்கள் அமைதியைப் பிடித்துக்கொண்டு,

சொற்களை தரையில் விட்டுவிடுகின்றன.




காற்று மெதுவாகச் செல்லும்,

எதையும் குலைக்கக் கூடாதென்று.

பறவைகள் அருகில் சுருங்கி,

குளிரில் கனவுகளை மறைக்கின்றன.


வீடுகளின் கூரைகளில் பனி தங்க,

நேரம் சற்றே நிற்கிறது.

பாதச்சுவடுகள் கூட,

பனியில் கரைந்து விடுகின்றன.


அந்த அமைதியின் நடுவே,

மனித மனம் சுவாசிக்கிறது.

பனிப்பொழிவு சொல்லும் உண்மை —

அமைதியும் கவிதைதான்.


(கவிஞர் குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்