- குமரேஸ்வரி.சி
பனித்துளிகள் வானிலிருந்து விழுகின்றன,
சொல்லாமல் சொல்லும் மொழிபோல்.
உலகம் மெல்ல மௌனம் போர்த்தி,
தன்னைத் தானே கேட்கிறது.
மண் வெம்மையைத் தாங்கிக் கொள்கிறது,
மறைந்த காயங்களை மூடுவது போல.
மரங்கள் அமைதியைப் பிடித்துக்கொண்டு,
சொற்களை தரையில் விட்டுவிடுகின்றன.

காற்று மெதுவாகச் செல்லும்,
எதையும் குலைக்கக் கூடாதென்று.
பறவைகள் அருகில் சுருங்கி,
குளிரில் கனவுகளை மறைக்கின்றன.
பாதச்சுவடுகள் கூட,
பனியில் கரைந்து விடுகின்றன.
அந்த அமைதியின் நடுவே,
மனித மனம் சுவாசிக்கிறது.
பனிப்பொழிவு சொல்லும் உண்மை —
அமைதியும் கவிதைதான்.
(கவிஞர் குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்)
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
{{comments.comment}}