- ச.சித்ராதேவி
திருநெல்வேலி: பனிக் காலம் தொடங்கி விட்டது.. மார்கழி மாசமும் வந்தாச்சு.. மார்ச்சளி பிரச்சினையும் இனி தலைவிரித்தாடும். இந்த பனிக் காலத்தில் ஏற்படும் இருமல், சளி. மூக்கில் நீர் ஒழுகுதல், மூக்கு அடைப்புக்கு பாட்டி வைத்தியம் பார்த்து உடம்பை பாதுகாக்கலாம்.
இதையெல்லாம் மருந்துன்னே சொல்ல முடியாது.. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களைத்தான் நமது முன்னோர்கள் மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர். அதைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
பூண்டு சூப்
தேவையான பொருட்கள்

சின்ன பூண்டு 15
சின்ன வெங்காயம் 15
சின்ன தக்காளி 1
இதில் பூண்டு வெங்காயம் லேசாக தட்டி இரண்டு டம்ளர் தண்ணீர் கலந்து மிதமான சூட்டில் வேக வைத்து ஒரு டம்ளராக வந்தவுடன் சூடு தாங்கும் அளவில் குடிக்க வேண்டும். வெற்றிலையில் மூன்று மிளகு கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம்.
இதேபோல தூதுவளை இலை துளசி வெற்றிலை சாறு எடுத்து காலை மாலை குடித்து வரலாம். அதுவும் நன்றாக கேட்கும்.
மிளகு 100கி
சுக்கு 50கி
அதிமதுரம் 15கி
திப்பிலி 10கி
சித்தரத்தை 10கி
லவங்கப்பட்டை 5கி
ஏலக்காய் 5
தாளிசபத்திரி10 கி
எல்லாப் பொருள்களையும் நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு 1/2கரண்டி வெந்நீரில் கலந்து குடிக்க லாம்.தேனிலும் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
சளி இல்லாத வறட்டு இருமலுக்கு கடுகை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் உடனே கேட்கும். சித்தரத்தை சிறு துண்டு வாயில் போட்டு எச்சில் மட்டும் விழுங்கியும் வரலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொருட்கள் தான்.
(இதுபோன்ற மருத்துவத்தை எடுத்துக் கொள்ளும்போது உரிய ஆலோசனைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது. ச.சித்ரா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}