பனியும் கொட்டுது.. மழையும் பெய்யுது.. அப்படியே மூக்கும் ஒழுகுதா.. இந்தாங்க பாட்டி வைத்தியம்!

Dec 16, 2025,01:38 PM IST

- ச.சித்ராதேவி


திருநெல்வேலி: பனிக் காலம் தொடங்கி விட்டது.. மார்கழி மாசமும் வந்தாச்சு.. மார்ச்சளி பிரச்சினையும் இனி தலைவிரித்தாடும். இந்த பனிக் காலத்தில் ஏற்படும் இருமல், சளி. மூக்கில் நீர் ஒழுகுதல், மூக்கு அடைப்புக்கு பாட்டி வைத்தியம் பார்த்து உடம்பை பாதுகாக்கலாம்.


இதையெல்லாம் மருந்துன்னே சொல்ல முடியாது.. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களைத்தான் நமது முன்னோர்கள் மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர். அதைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.


பூண்டு சூப் 


தேவையான பொருட்கள் 




சின்ன பூண்டு 15

சின்ன வெங்காயம் 15

சின்ன தக்காளி 1


இதில் பூண்டு வெங்காயம் லேசாக தட்டி இரண்டு டம்ளர் தண்ணீர் கலந்து மிதமான சூட்டில் வேக வைத்து ஒரு டம்ளராக வந்தவுடன் சூடு தாங்கும் அளவில் குடிக்க வேண்டும். வெற்றிலையில் மூன்று மிளகு கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம். 


இதேபோல தூதுவளை இலை துளசி வெற்றிலை சாறு எடுத்து காலை மாலை குடித்து வரலாம். அதுவும் நன்றாக கேட்கும்.


மிளகு 100கி

சுக்கு 50கி

அதிமதுரம் 15கி

திப்பிலி 10கி

சித்தரத்தை 10கி

லவங்கப்பட்டை 5கி

ஏலக்காய் 5

தாளிசபத்திரி10 கி


எல்லாப் பொருள்களையும் நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு 1/2கரண்டி வெந்நீரில் கலந்து குடிக்க லாம்.தேனிலும் கலந்து  சாப்பிட்டு வந்தால் குணமாகும்.


சளி இல்லாத வறட்டு இருமலுக்கு கடுகை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் உடனே கேட்கும். சித்தரத்தை சிறு துண்டு வாயில் போட்டு எச்சில் மட்டும் விழுங்கியும் வரலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொருட்கள் தான்.


(இதுபோன்ற மருத்துவத்தை எடுத்துக் கொள்ளும்போது உரிய ஆலோசனைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது. ச.சித்ரா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை

news

விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி

news

பிப்., 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்: புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

news

திமுக ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை

news

பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!

news

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்

news

ரஷ்ய எண்ணையை வாங்குவதை கைவிடுகிறது இந்தியா.. வரியைக் குறைத்தார் டிரம்ப்

news

தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!

news

தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்