ரஷ்ய எண்ணையை வாங்குவதை கைவிடுகிறது இந்தியா.. வரியைக் குறைத்தார் டிரம்ப்

Feb 03, 2026,10:26 AM IST

டெல்லி: ரஷ்ய எண்ணெயை கைவிட இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதால், இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியை 18 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடனான நேரடிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்க இந்தியா சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.


இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 25%-லிருந்து 18%-ஆக உடனடியாகக் குறைக்கப்படுகிறது. முன்னதாக ரஷ்ய எண்ணெய் விவகாரத்தால் இது 50% வரை உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் வருமானத்தைக் குறைக்க ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வந்தார். அதன்படி, இந்தியா தனது தினசரி 1.5 மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நிறுத்திவிட்டு, மாற்று நாடுகளை நாட உள்ளது.


இந்தியா அமெரிக்காவிலிருந்து சுமார் 42 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயப் பொருட்களை வாங்கவும், அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை பூஜ்ஜியமாகக் குறைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பலனைக் கொடுக்கும்.


இருப்பினும், ரஷ்ய எண்ணெய்க்குப் பதிலாக வெனிசுலா போன்ற நாடுகளிலிருந்து எண்ணெய் பெறுவது அவ்வளவு எளிதல்ல என்றும், அதற்குப் பல ஆண்டுகள் மற்றும் பெரும் முதலீடு தேவைப்படும் என்றும் எரிசக்தி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


தற்போதை அமெரிக்க அதிபரின் உத்தரவுபடி,  மேட் இன் இந்தியா பொருட்களுக்கு இனி 18% வரி மட்டுமே விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய - அமெரிக்க வர்த்தக உறவில் புதிய மைல்கல் - பிரதமர் மோடி


அமெரிக்க அதிபரின் உத்தரவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று எனது அன்பிற்குரிய நண்பர் அதிபர் ட்ரம்ப் அவர்களுடன் பேசியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மேட் இன் இந்தியா பொருட்களுக்கான இறக்குமதி வரி இப்போது 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 


இந்த அற்புதமான அறிவிப்பிற்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் ட்ரம்ப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளும், மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, அது நமது மக்களுக்குப் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், இருதரப்புக்கும் சாதகமான ஒத்துழைப்பிற்கான அபரிமிதமான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.


உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு அதிபர் ட்ரம்ப் அவர்களின் தலைமை மிகவும் அவசியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்குகிறது.


நமது கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்கு கொண்டு செல்ல அவருடன் நெருக்கமாக பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.


இந்த அறிவிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை

news

தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!

news

இயற்கையின் சமநிலை.. இறைவனின் கணக்கு.. இதைப் புரிந்து கொள் மனிதனே!

news

தென்றல் தவழும்.. தமிழ் நாயகன் முருகனின்.. திருமலை திருக்கோவில்!

news

பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!

news

தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்

news

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்

news

ரஷ்ய எண்ணையை வாங்குவதை கைவிடுகிறது இந்தியா.. வரியைக் குறைத்தார் டிரம்ப்

news

மகா பாரத்தின் மிகப்பெரிய ஆளுமை.. "பீஷ்மர்"!

அதிகம் பார்க்கும் செய்திகள்