- அ. தாமஸ்
தேவைக்குப் பயன்படுத்துவோம்; தேவையற்றதை தேவையானவருக்குப் பகிர்ந்தளிப்போம். பிறருக்குத் தேவையற்றது நமக்கு தேவையானதாகவும், நமக்குத் தேவையற்றது பிறருக்குத் தேவையானதாகவும் இருக்கலாம். பயனற்றதைச் சேர்ப்பது அனைத்தையும் பாழ்படுத்தும். பழையன களையாமல் புதியன சேர்க்க முடியாது. எனவே, புதியன சேர்க்க பழையன களைவோம்.
எது பயனற்றது, பயனுள்ளது என்பதை பகுத்தறியும் பக்குவம் இல்லாததால், தான் அனைத்தையும் தேடித் தேடிச் சேர்க்கிறோம். அதன் விளைவே கையில் இருப்பதை பையில் தேடுவதும், மடியில் இருப்பதை மரத்தில் தேடுவதும், படுக்கையில் இருந்து கொண்டே படுக்கையைத் தேடுவதுமாக நம் மனம் பாடாய்படுகிறது. இந்நிலை தவிர்க்கவாவது பயனற்றதைப் பகிர்ந்தளிப்போம்.

நாளை தேவைப்படும் என்று பலவற்றைச் சேர்க்கிறோம்; நாளைக்கு, நாமே தேவைப்படாத பொழுது நாம் நாளைக்காக சேர்த்தது யாருக்குப் பயன்படும்? எனவே இன்றைய நாளை பொறுப்போடு களிப்போம்; நாளைய நாளின் தேவையை மறப்போம்; ஒவ்வொரு நாளும் மகிழ்வினில் திளைப்போம்.
பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது பொருள் மட்டுமல்ல நல்லறிவும் தான், பொருள் குப்பையை விட அறிவுக் குப்பை அதீத ஆபத்தானது. நிறைந்ததைக் குறைக்காமல் மேலும் நிரப்புவது சாத்தியம் இல்லைதானே. எனவே, அறிந்ததைக் கொடுப்போம்; அறியாததை தினம் அறிந்திட நினைப்போம்; அறிந்ததைப் பகிர்ந்தே பகிர்வின் மகிழ்வினில் நிலைப்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
எறும்பு ஊர!
தேவைக்குப் பயன்படுத்துவோம்.. தேவையற்றதை தேவையானவருக்குப் பகிர்ந்தளிப்போம்!
எது சுதந்திரம்?
துரோகம்!
பெண்களை இழிவாகப் பேசாதே ஆண்களே
ஆடி அமாவாசை மாதமும், அதன் சிறப்புகளும்!
தவெக கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தனி தீர்மானம்: ஆதரவு யார்? எதிர்ப்பு யார்?
சென்னையில் சொத்து வரி கிடுகிடு உயர்வா.. மாநகராட்சி தரும் விளக்கம் என்ன?
தொகுதி மறுவரையறை: சட்டசபையில் தமிழக அரசு தனித் தீர்மானம்
{{comments.comment}}