ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் தேங்காயின் மருத்துவ மகத்துவம்!

Dec 15, 2025,04:32 PM IST

- அ. கோகிலா தேவி


சென்னை: தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் அல்லது தேங்காய் பால் சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.


தினமும் 40 முதல் 50 கிராம் பச்சை தேங்காய் சாப்பிட்டால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதில்லை. குறிப்பாக புதிதாக தேங்காயை உடைத்து அந்த சில்லை சாப்பிடுவது நல்லது. அதுதான் நல்ல பலனைக் கொடுக்கும்.


இப்படி பச்சைத் தேங்காயைச் சாப்பிடுவதால், இதயம், தலைமுடி, சருமம், வயிறு போன்றவற்றிற்கு நன்மை உண்டாகும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து செரிமானப் பிரச்சினையை சரி செய்கிறது. வயிற்றுப் புண்ணுக்கு தேங்காய்ப் பால் நல்லது செய்யும் என்று சொல்வார்கள்.




தேங்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலம் நல்ல கொழுப்புக்களை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். மேலும் சரும ஆரோக்கியத்தில் இதன் பங்கு மேலானதாகும் . முடி மற்றும் சரும பராமரிப்பு பொருள்களில் தேங்காயின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.


இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.


அதேசமயம், முக்கியமாக நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது - அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு  என்ற பழமொழிக்கேற்ப இதனை அளவுடன் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்வினை வாழ்வோம்.


(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்