- க.யாஸ்மின் சிராஜூதீன்
எழுத்துகளின் கோர்வையால்
உருவம் பெற்றாயே ....
நாவின் சுழற்சியால்
உள்ளுறுப்புகளின் உதவியால்
பிறந்தாயே......
ஒலியாய் வெளிப்பட்டு
செய்தியாய் செவிகளை அடைகின்றாயே ...
இதமான வார்த்தையாய் இதயத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாயே....
கடினமான வார்த்தையாய்
இதயத்தை கனக்கச் செய்கிறாயே....

சிந்திய திரவம் போல நீயும்
கடின வார்த்தையாய் சிந்தி விட்டால் அள்ள முடியாதே....
சிந்திய வடு போல மனதில் ஆறாத வடுவாய்
நிலைபெற்று விடுவாயே....
இன்பம் தரும் வார்த்தையாய் பிறந்திடுவாயே.....
பிறர் மனக்குறையை நீக்கும் மருந்தாய் இருந்திடுவாயே...
உந்தன் ஆட்சி மனிதன் வாழ்விலே.....
அதற்கு சாட்சி வரலாற்று ஏட்டிலே....
வாழ்வில் உயர்வு பெற்று சிறப்பு பெற்று வாழ்கிறான்
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!
சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி
'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை
{{comments.comment}}