- க.யாஸ்மின் சிராஜூதீன்
எழுத்துகளின் கோர்வையால்
உருவம் பெற்றாயே ....
நாவின் சுழற்சியால்
உள்ளுறுப்புகளின் உதவியால்
பிறந்தாயே......
ஒலியாய் வெளிப்பட்டு
செய்தியாய் செவிகளை அடைகின்றாயே ...
இதமான வார்த்தையாய் இதயத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாயே....
கடினமான வார்த்தையாய்
இதயத்தை கனக்கச் செய்கிறாயே....

சிந்திய திரவம் போல நீயும்
கடின வார்த்தையாய் சிந்தி விட்டால் அள்ள முடியாதே....
சிந்திய வடு போல மனதில் ஆறாத வடுவாய்
நிலைபெற்று விடுவாயே....
இன்பம் தரும் வார்த்தையாய் பிறந்திடுவாயே.....
பிறர் மனக்குறையை நீக்கும் மருந்தாய் இருந்திடுவாயே...
உந்தன் ஆட்சி மனிதன் வாழ்விலே.....
அதற்கு சாட்சி வரலாற்று ஏட்டிலே....
வாழ்வில் உயர்வு பெற்று சிறப்பு பெற்று வாழ்கிறான்
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக எம்பி மனு
திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைகிறதா? இது திமுக.,விற்கு நெருக்கடியை தருமா?
நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாற்றத்தை நோக்கி ஒரு சிந்தனை!
சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிரடி உத்தரவு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
வார்த்தைகள்.. எழுத்துகளின் கோர்வையால் உருவம் பெற்றாயே!
விரி பொழில் சூழ் குன்றையார்.. விறன்மிண்ட நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு
Bread Halwa .. வீட்டில் பிரெட் இருக்கா.. எடுத்துட்டு வாங்க.. ஸ்வீட்டா ஹல்வா பண்ணுவோம்!
{{comments.comment}}