- க.யாஸ்மின் சிராஜூதீன்
எழுத்துகளின் கோர்வையால்
உருவம் பெற்றாயே ....
நாவின் சுழற்சியால்
உள்ளுறுப்புகளின் உதவியால்
பிறந்தாயே......
ஒலியாய் வெளிப்பட்டு
செய்தியாய் செவிகளை அடைகின்றாயே ...
இதமான வார்த்தையாய் இதயத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாயே....
கடினமான வார்த்தையாய்
இதயத்தை கனக்கச் செய்கிறாயே....

சிந்திய திரவம் போல நீயும்
கடின வார்த்தையாய் சிந்தி விட்டால் அள்ள முடியாதே....
சிந்திய வடு போல மனதில் ஆறாத வடுவாய்
நிலைபெற்று விடுவாயே....
இன்பம் தரும் வார்த்தையாய் பிறந்திடுவாயே.....
பிறர் மனக்குறையை நீக்கும் மருந்தாய் இருந்திடுவாயே...
உந்தன் ஆட்சி மனிதன் வாழ்விலே.....
அதற்கு சாட்சி வரலாற்று ஏட்டிலே....
வாழ்வில் உயர்வு பெற்று சிறப்பு பெற்று வாழ்கிறான்
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்
அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு : அமலாக்கத் துறை மனு தள்ளுபடி
தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு விசாரணைக்கு சென்னை ஹைகோர்ட் தடை
கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்
உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?
உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?
உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?
நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!
{{comments.comment}}