வார்த்தைகள்.. எழுத்துகளின் கோர்வையால் உருவம் பெற்றாயே!

Mar 18, 2026,03:47 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


எழுத்துகளின் கோர்வையால்

உருவம் பெற்றாயே  .... 


நாவின் சுழற்சியால் 

உள்ளுறுப்புகளின் உதவியால்

பிறந்தாயே...... 


ஒலியாய் வெளிப்பட்டு 

செய்தியாய்  செவிகளை அடைகின்றாயே ...


இதமான வார்த்தையாய் இதயத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாயே.... 


கடினமான வார்த்தையாய் 

இதயத்தை கனக்கச் செய்கிறாயே.... 




சிந்திய திரவம் போல நீயும் 

கடின வார்த்தையாய் சிந்தி விட்டால் அள்ள முடியாதே.... 


சிந்திய வடு போல  மனதில் ஆறாத வடுவாய் 

நிலைபெற்று விடுவாயே.... 


இன்பம் தரும் வார்த்தையாய் பிறந்திடுவாயே.....


பிறர் மனக்குறையை நீக்கும் மருந்தாய் இருந்திடுவாயே... 


உந்தன் ஆட்சி மனிதன் வாழ்விலே..... 


அதற்கு சாட்சி வரலாற்று ஏட்டிலே.... 


 உன்னால் மனிதன் 

பேச்சில் மிளிர்கிறான்.. 


வாழ்வில் உயர்வு பெற்று சிறப்பு பெற்று வாழ்கிறான்


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்