சென்னை : நேற்று நடைபெற்ற தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக பெண்கள் வன்கொடுகை தடுப்பு சட்டத்தின் கீழ் தஞ்சை போலீசார், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உதயநிதியின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து டில்லி நாடாளுமன்ற வளாகம் முன்பாக திமுக எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உதயநிதியின் கைதை கண்டித்து திமுக.,வினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் திமுக.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். உதயநிதியை கைது செய்து அழைத்துச் செல்லும் போலீசாரின் வாகனத்தை மறித்து திமுக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் உதயநிதியின் கைதை கண்டித்து திமுக.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாளை தமிழக சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சி தலைவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதியின் இந்த பேச்சிற்கு ஆதரவாக திமுக.,வினர் பேசி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!
உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர் நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது
உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூரில் தவெக மகளிர் அணி சார்பில் போலீசில் புகார்
வசவாளர்களை வாழ்க என சொல்லலாம்.. ஆனால் ஆபாசநிதிகளை.. அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம்
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
{{comments.comment}}