கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்

Aug 04, 2026,02:32 PM IST

சென்னை : தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, சென்னையில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, விசாரணைக்குப் பின்னர் இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தஞ்சையில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நடிகை த்ரிஷா குறித்தும், முதல்வர் விஜய் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக தவெக மகளிர் அணியினர் அளித்த புகாரின் பேரில் தஞ்சை போலீசார் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.


இதன் அடிப்படையில் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரை கைது செய்து விசாரைணக்கு அழைத்துச் சென்றனர்.




உதயநிதி வீட்டில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. உதயநிதி கைதுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் உதயநிதி கைது தொடர்பான விவரங்கள் அரசு தரப்பில் தாக்கல் செய்ய தாமதம் ஆனதால் இந்த வழக்கின் விசாரணை முதலில் பகல் 12 மணிக்கும், பிறகு 02.30 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.


திமுக.,வினர் போராட்டம் :


உதயநிதி கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராக தவெக.,வினரும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட திமுக.,வினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.


இதற்கிடையில் மதிய உணவு அருந்துவதற்காகவும், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் தற்காலிகமாக உதயநிதி தங்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


ஓய்வு மற்றும் உணவு இடைவேளைக்கு பிறகு, அவர் மீண்டும் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுவார் என சொல்லப்பட்டது. அங்கு அவரை பார்க்க சென்ற முன்னாள் அமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறிது நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் உதயநிதி விசாரணைக்காக தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்.


விடுவிக்க கோர்ட் உத்தரவு :


இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் உதயநிதி கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்றைக்குள் விசாரணையை முடித்து உதயநிதியை விடுவிக்க வேண்டும் என நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்தார். 


அதற்கு, ரிமாண்ட் செய்யும் எண்ணம் கிடையாது. விசாரணைக்காக மட்டுமே அவர் தஞ்சை அழைத்து செல்லப்படுகிறார் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, விசாரணைக்கு பிறகு அவரை விடுவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என உதயநிதி தரப்பிற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்குப் பின்.. இன்றே விடுவிக்க வேண்டும்.. ஹைகோர்ட்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

Dilani Sridharan Poem: கைம்பெண்ணின் க(வி)தையிது!

news

Santhi Sinnathambi Poem: மாற்றியதோ மாறியதோ!

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்