- வீ தமிழ்ச்செல்வி
படைப்புகள் யாவும் மிக எளிதில் உருவாக்கப்படுபவை அல்ல; சிந்தனையின் நீட்சியே ஒரு படைப்பாக உருக்கொள்கிறது. ஒரு சிறந்த படைப்பு உருவாக நேரத்தையோ அல்லது உழைப்பையோ முதலீடாகக் கொள்ள வேண்டும். மதம் கொண்ட யானை தன்னைச் சுற்றியுள்ளவற்றை அழிக்க மட்டுமே முயல்கிறது. ஆனால், தெளிவான மனமும் சிறந்த சிந்தனையும் ஒரு பேராற்றலாக வெளிப்படுகின்றன.
இன்றைய மாணவர்கள் சிந்திக்க மறந்துவிட்டார்கள்; புதிய படைப்புகளை உருவாக்கத் தவறிவிட்டார்கள். எதற்காகப் போட்டியிட வேண்டும், எதற்காகப் போராட வேண்டும், இந்தச் சமூகத்தை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்க அவர்களுக்கு நேரமில்லை. தங்கள் கைகளில் இருக்கும் கைப்பேசிகளும், சமூக வலைதளங்களும் நேரத்தைத் திருடுவதை அவர்கள் உணரவில்லை. எங்கே எழுவது, எங்கே மீள்வது என்று தெரியாமல் பல்வேறு உணர்ச்சிகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.

இந்தச் சமூகக் கட்டமைப்பில் வாழும் ஒவ்வொரு நபரும் வெற்றி எனும் களத்தைக் காண வந்தவர்கள்; அதற்கான திறவுகோலைத் தேடிப் பயணிப்பவர்கள். அவர்களை வழிநடத்தும் பொறுப்பை நாம் எவ்வாறு செய்யப் போகிறோம்? ஒழுக்கத்தையும் பண்பையும் எவ்வாறு போதிக்கப் போகிறோம்?
தடம் மாறிச் செல்லும் நீர் போலவும், கூட்ட நெரிசலில் கலைந்து செல்லும் காற்றைப் போலவும், போகிற போக்கிலெல்லாம் வாழ்வது வாழ்க்கையல்ல என்பதை இன்றைய தலைமுறைக்கு நாம் உணர்த்த வேண்டும்.
(THAMIZHSELVI V, B.T ASSISTANT , GHS,ANGUCHETTIPALAYAM , PANRUTI, CUDDALORE DT)
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}