தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்

Feb 03, 2026,10:39 AM IST

சென்னை : முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரையின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு பாடலாசியிர் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ்தள பக்கத்தில் உருக்கமாக கவிரை வெளியிட்டுள்ளார்.


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரையின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். அதே போல் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவரும் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அண்ணா குறித்த தங்களின் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ்தள பக்கத்தில் அண்ணா குறித்து நீண்ட கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் இதோ...





வான்நீலம் உள்ளவரை

கடல் இருக்கிறது

என்று பொருள்


மாற்றங்கள் உள்ளவரை

பசி இருக்கிறது

என்று பொருள்


தமிழ்நாடு

என்ற சொல்லுக்குள்

உயிராடல் உள்ளவரை

நீ உயிரோடு 

இருக்கிறாய் அண்ணா!


இருமொழிக் கொள்கையென்ற

எரிதழல் உள்ளவரை

உன் அக்கினி 

அணையாது அண்ணா!


அடித்தட்டுக் கடைமனிதன்

அதிகாரம் பெறும்வரை

உன் உயிர்

உலாவிக்கொண்டிருக்கும்

அண்ணா!


பகைவர்கள்

அடிக்கடி தரும் நெருக்கடி

உன் தேவை இன்னும்

தீரவில்லை என்கிறது

தீர்க்கமாக


உன்னை அறியாமல்

உன் பெயரை மட்டுமே

அறிந்த தலைமுறை

உன் கொள்கையென்னும்

குன்றேறி நின்றால்

அடுத்த நூற்றாண்டிலும்

நீயே ஆள்வாய் அண்ணா!


யுகச் சவாரியில்

காலத்தின் கடைக்கோடிவரை

நீள்வாய் அண்ணா!


பள்ளி மாணவனாய் அழுத

கண்ணீரின் மிச்சம்

இப்போதும் கசிகிறது

கண்ணின் கடைவிழியில்

புகழ் வணக்கம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி

news

தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை

news

தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!

news

இயற்கையின் சமநிலை.. இறைவனின் கணக்கு.. இதைப் புரிந்து கொள் மனிதனே!

news

தென்றல் தவழும்.. தமிழ் நாயகன் முருகனின்.. திருமலை திருக்கோவில்!

news

பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!

news

தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்

news

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்

news

ரஷ்ய எண்ணையை வாங்குவதை கைவிடுகிறது இந்தியா.. வரியைக் குறைத்தார் டிரம்ப்

அதிகம் பார்க்கும் செய்திகள்