சென்னை : முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரையின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு பாடலாசியிர் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ்தள பக்கத்தில் உருக்கமாக கவிரை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரையின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். அதே போல் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவரும் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அண்ணா குறித்த தங்களின் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ்தள பக்கத்தில் அண்ணா குறித்து நீண்ட கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் இதோ...

வான்நீலம் உள்ளவரை
கடல் இருக்கிறது
என்று பொருள்
மாற்றங்கள் உள்ளவரை
பசி இருக்கிறது
என்று பொருள்
தமிழ்நாடு
என்ற சொல்லுக்குள்
உயிராடல் உள்ளவரை
நீ உயிரோடு
இருக்கிறாய் அண்ணா!
இருமொழிக் கொள்கையென்ற
எரிதழல் உள்ளவரை
உன் அக்கினி
அணையாது அண்ணா!
அடித்தட்டுக் கடைமனிதன்
அதிகாரம் பெறும்வரை
உன் உயிர்
உலாவிக்கொண்டிருக்கும்
அண்ணா!
பகைவர்கள்
அடிக்கடி தரும் நெருக்கடி
உன் தேவை இன்னும்
தீரவில்லை என்கிறது
தீர்க்கமாக
உன்னை அறியாமல்
உன் பெயரை மட்டுமே
அறிந்த தலைமுறை
உன் கொள்கையென்னும்
குன்றேறி நின்றால்
அடுத்த நூற்றாண்டிலும்
நீயே ஆள்வாய் அண்ணா!
யுகச் சவாரியில்
காலத்தின் கடைக்கோடிவரை
நீள்வாய் அண்ணா!
பள்ளி மாணவனாய் அழுத
கண்ணீரின் மிச்சம்
இப்போதும் கசிகிறது
கண்ணின் கடைவிழியில்
புகழ் வணக்கம்.
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!
மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு
15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
{{comments.comment}}