வாட்ஸ்ஆப், டிவிட்டர், பேஸ்புக்.. சோசியல் மீடியா பக்கங்களை.. மொத்தமாக ஆக்கிரமித்த "கேப்டன்"

Dec 28, 2023,06:56 PM IST

சென்னை:  வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும் விஜயகாந்தின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்தும், அவர்களுடைய நினைவுகளை பரிமாறியும் மக்கள் விஜயகாந்த்தின் நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.


கம்பீரமான நடை, நேர்கொண்ட பார்வை, எதற்கும் தளராத மனம், அனைவரிடமும் அன்பாக பழகும் எளிமை, தாய்மை உள்ளம் படைத்த கர்ணன்.. என பல சிறப்புகளை பெற்ற கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.




இந்த செய்தி கேட்டு திரை நட்சத்திரங்கள், கட்சித் தொண்டர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சோகத்தில் மூழ்கினர். யாராலும் வெறுக்க முடியாத அரசியல் தலைவராக  வலம் வந்தவர் விஜயகாந்த். நல்ல உள்ளம் படைத்த விஜயகாந்தை.. நாம் இழந்து விட்டோமே.. இனி ஒரு பிறவியிலும் இதுபோன்ற மனிதரை நாம்மால் பார்க்க முடியுமா.. என்று பலரும் தங்களின் வேதனைகளையும், வருத்தங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.


சமூக வலைதளங்கள் அனைத்திலும் கேப்டன்தான் நீக்கமற நிறைந்துள்ளார். பலரும் தங்கள் வாட்ஸ் அப் டிபி களில் விஜயகாந்த் புகைப்படத்தை வைத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர் நடித்த படங்களின்  சிறப்புகளைப் பேசியும், அவர் நடித்த படங்களின் வசனங்களை பற்றியும் சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர்.


வாட்ஸ் ஆப் குரூப்கள் அனைத்திலும் வழக்கமான பகிர்வுகளை நிறுத்தி விட்டு விஜயகாந்த் குறித்து மட்டுமே பலரும் பகிர்ந்து வருகின்றனர். அவரது படங்களில் இடம் பெற்ற பாடல்கள், வசனங்கள் உள்ளிட்டவற்றை ஷேர் செய்கின்றனர்.




ரமணா படத்தில் அவர் கிளைமேக்ஸ் காட்சியில் பேசும் வசனத்தை பலரும் ஷேர் செய்கிறார்கள். அதேபோல பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் வரும் விஜயகாந்த்தின் மரணக் காட்சியையும் பலர்  ஷேர் செய்து வருகிறார்கள்.


பேஸ்புக்  பக்கங்கள், ட்விட்டர் பக்கங்கள் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும்  விஜயகாந்த்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார்.  பொது மக்கள் கூடும் டீக்கடை, வணிகதலங்கள் உள்பட எங்கு பார்த்தாலும் விஜயகாந்த் குறித்த பேச்சுதான் அதிகம் உள்ளது. 

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்