அமைச்சரவை பதவியேற்பின்போது.. நீங்க அதைப் பார்த்தீங்களா.. பரபரப்பைக் கிளப்பிய வீடியோ!

Jun 10, 2024,05:31 PM IST

டெல்லி: டெல்லியில் நேற்று நடந்த பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பின்போது , ஒரு விலங்கின் நடமாட்டம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அது பூனையா அல்லது சிறுத்தையா என்று விவாதங்கள் கிளம்பியுள்ளன.


பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதற்கான விழா ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 8000க்கும் மேற்பட்டோர் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் பிரதமர் உள்பட 72 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.




அமைச்சராக துர்காதாஸ் உய்க்கே பதவியேற்றபோது நடந்த சம்பவம் இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது அமைச்சராக துர்காதாஸ் உய்க்கேவுக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்த பிறகு அவர் லெட்ஜரில் போய் கையெழுத்திட்டார். அதன் பிறகு அவர் எழுந்து குடியரசுத் தலைவரை நோக்கி சென்றபோது கேமரா அவர் பக்கம் திரும்பியபோது, அவருக்குப் பின்னால் குடியரசுத் தலைவர் மாளிகை வராந்தாவில் ஒரு விலங்கு நடமாடுவது பதிவாகியுள்ளது.


இதுதான் பலரையும் பல விதமாக கற்பனை செய்ய வைத்துள்ளது. இந்த விலங்கைப் பார்த்தால் பெரிய சைஸ் பூனை போலத்தான் தெரிகிறது. ஆனால் சிலர் இது சிறுத்தையாக இருக்கலாம் என்று சந்தேகம் கிளப்பியுள்ளனர். இந்த வீடியோவை இந்தியா டுடே செய்தியாளர் ஸ்நேகா  மொர்தானி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது வினோதமான விலங்காக இருக்கிறது.  உங்களுக்கு வித்தியாசமாக ஏதாவது தெரிகிறது.. சிறுத்தை என்று சந்தேகிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் ஆவார்.


ஆனால் அத்தனை பேர் பாதுகாப்புப்  பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் சிறுத்தை வந்திருந்தால் அதை யாருமே பார்க்காமல் இருந்திருப்பார்களா.. இது சாதாரண பூனையாகத்தான் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று பலர் சொல்கிறார்கள். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வரவில்லை. ஆனால் இருளின் பின்னணியில் நடமாடிய அந்த விலங்கின் உருவம் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

குழந்தை

news

புதுவருட டைரி!

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்