என்னங்க சொல்லுறீங்க... சோனியா காந்திக்கு சொந்தமாக கார் கூட கிடையாதா?

Feb 16, 2024,05:46 PM IST

டில்லி : காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சொந்தமாக கார் கூட கிடையாது என அவரது பிரமான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சோனியா காந்தி 2006ம் ஆண்டு முதல் ரேபரெலி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, எம்பி.,யாக இருந்து வந்தார். தற்போது உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் ராஜ்யசபாவிற்கு போட்டியிட முடிவு செய்து, ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிடுவதற்காக சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதோடு அவர் இணைத்திருந்த பிரமான பத்திரத்தில் அவரது சொத்து மதிப்பு உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் தான் கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் அதிக பேசப்படும் விஷயமாக மாறி உள்ளது.




சோனியா காந்தி தன்னுடைய பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த தகவல்களின் அடிப்படையில், அவரது சொத்து மதிப்பு ரூ.12.53 கோடி தானாம். கடந்த லோக்சபா தேர்தலில் அவர் தாக்கல் செய்ய பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்புடன் ஒப்பிட்டு பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவரின் சொத்து மதிப்பு ரூ.72 லட்சங்கள் மட்டுமே அதிகரித்துள்ளது. மேலும் அவர் குறிப்பிட்டிருந்த விபரங்களின் படி, அவருக்கு சொந்தமாக வாகனம் ஏதும் கிடையாதாம். அதே சமயம் இத்தாலியிலும் தனக்கு சொத்து இருப்பதாக சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.


இத்தாலியில் தன்னுடைய அப்பா தனக்கு அளித்த பங்காக சொத்துக்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.26 லட்சத்திற்கும் அதிகம். இது தவிர 88 கிலோ வெள்ளி, 1267 கிராம் தங்கம் மற்றும் தங்க நகைகள், 2529.28 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட விவசாய நிலம் டில்லிக்கு அருகில் உள்ள தீரா மண்டி என்ற கிராமத்தில் உள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.5.88 கோடியாகும். இதோடு எம்பி சம்பளமாக தான் இதுவரை பெற்ற தொகை, வங்கி முதலீடுகள் மூலம் கிடைக்கு வட்டி உள்ளிட்ட இதர வருமானங்கள் குறித்த விபரங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


சோனியா காந்தி penguin book india, oxford university press, ananda publishers, continental publications ஆகியவற்றுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவருக்கு காப்புரிமையாகவும் குறிப்பிட்ட தொகை வருமானமாக வருவதாக சொல்லப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பிரஸ் மூலமாக மட்டும் ரூ.1.69 லட்சம் கிடைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சோனியா காந்தி மீது, சுப்ரமணிய சாமி தொடர்ந்து நேரஷனல் ஹெரால்டு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இது தவிர டில்லி ரவுஸ் அவென்யூ கோர்ட்டில் சட்டப்பிரிவு 420, 120பி, 403, 406 ஆகிய பிரிவுகளின் கீழ் சோனியா காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்