கருணாநிதி நினைவு நாள்.. நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

Aug 07, 2023,02:50 PM IST
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதேபோல டெல்லியிலும் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று. இதையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த பேரணியில் மாநில அஏமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அமைதிப் பேரணி கடற்கரை கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைந்தது. அங்கு மலர் தூவி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் உருவப் படங்கள், சிலைகளுக்கு திமுகவினர், கூட்டணிக் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கூட்டணிக் கட்சி எம்பிக்களும் அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்