கருணாநிதி நினைவு நாள்.. நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

Aug 07, 2023,02:50 PM IST
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதேபோல டெல்லியிலும் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று. இதையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த பேரணியில் மாநில அஏமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அமைதிப் பேரணி கடற்கரை கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைந்தது. அங்கு மலர் தூவி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் உருவப் படங்கள், சிலைகளுக்கு திமுகவினர், கூட்டணிக் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கூட்டணிக் கட்சி எம்பிக்களும் அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்