இனி ஒரே டிக்கெட்.. மெட்ரோவில் போகலாம்.. லோக்கல் ரயிலில் ஏறலாம்.. பஸ்சுக்கும் அதே.. சூப்பர்ல!

May 14, 2024,10:01 PM IST

சென்னை: சென்னையின் முக்கிய போக்குவரத்து சேவைகளான பஸ், மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் ஆகியவற்றைப் பயன்படுத்தும்  மக்களுக்கு ஒரு அருமையான திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (கும்தா) வகுத்துள்ளது.


இதற்காக தனி செயலி அறிமுகப்படுத்தப்படும். அதில், ரீசார்ஜ் செய்து கொண்டு மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புற நகர் ரயில்களில் பயணிக்கலாம்.


மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு போக்குவரத்து சேவை மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக சென்னை போன்ற பெருநகரங்களில் எத்தனை பஸ் விட்டாலும், ரயில் விட்டாலும் போதாது. அந்த அளவுக்கு கூட்டம் இருக்கிறது.  மேலும் சென்னையில் பஸ்கள், ரயில்கள், மாடி ரயில், மெட்ரோ ரயில் என பல வகையான போக்குவரத்து உள்ளது. ஒவ்வொன்றையும் பயன்படுத்தும்போது பெரும் அயர்ச்சியாக இருப்பது இந்த டிக்கெட் எடுப்பதுதான். இந்தப் பிரச்சினையை தற்போது சரி செய்யப் போகிறார்கள்.




சென்னையில் உள்ள பஸ்,  மெட்ரோ ரயில், மின்சார ரயில் போன்ற போக்குவரத்து சேவைகளில் இதுவரை தனித்தனியான பயணச்சீட்டு வாங்கி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பஸ், மெட்ரோ ரயில், மின்சார ரயில்கள் ஆகிய அனைத்திற்கும் ஒரே டிக்கெட் என்ற திட்டம் நடைமுறையில் கொண்டு வர சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தீர்மானித்துள்ளது.


இந்த நிலையில் சென்னையில் இயக்கப்படும் பஸ், மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகியவற்றிற்கு ஒரே டிக்கெட் என்ற திட்டம் வரும் டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.  இதுதொடர்பாக கும்தா அமைப்பு ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.


டிசம்பர் முதல் வாரத்தில் முதல் கட்டம் அமலாக வாய்ப்பு


சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்தா) அதில் கூறியிருப்பதாவது:


பன்னோக்கு பயணச் சீட்டு திட்டம் தொடர்பான மொபைல் செயலியை உருவாக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல க்யூ ஆர் கோடு அடிப்படையிலான டிக்கெட் முறைக்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடைமுறைகள் முழுமை அடையவில்லை. ஜூன் அல்லது ஜூலை மாதம் டெண்டர் முடிவு செய்யப்படும். அதன் பின்னர் செயலின் முதல் கட்ட செயல்பாடு டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்ட் வைத்திருந்தால் போதும், பஸ்களில் ஏறலாம், ரயிலில் போகலாம், மெட்ரோவிலும் ஜாலியாக பயணிக்கலாம்.. இந்த ஆண்டு இறுதியில் ரொம்ப சிம்பிளாக மாறப் போகிறது சென்னையின் போக்குவரத்து சேவைகள். வருகிற புத்தாண்டுக்கு சென்னை மக்களுக்கு அளிக்கப்படும் சிறந்த பரிசாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்