சென்னை: சென்னையில் வலிப்பு வந்து ரோட்டில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். அவரை தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தன் ஓடி வந்து முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் வெளுத்து வாங்குகிறது. கூடவே தேர்தல் பிரச்சார அனலும் சேர்ந்து களமே போர்க்களமாக காணப்படுகிறது. ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் தீவிரமாக களமாடி வருகின்றனர்.
தென் சென்னை தொகுதி சூப்பர் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய தொகுதியாக மாறியிருக்கிறது. இங்கு திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் டாக்டர் ஜெயவர்த்தன் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகன் ஆவார். பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் களம் கண்டுள்ளார்.
டாக்டர் ஜெயவர்த்தன், அதி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவினருடன் இணைந்து அவர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், பிரச்சாரத்தின்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் போட்டுள்ள எக்ஸ் பதிவில், தென் சென்னை மக்களவையின் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் பிரச்சாரத்தின் போது சாலையில் நடந்து சென்ற பெண் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டதும் தேர்தல் பிரச்சாரத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு தான் மருத்துவர் என்ற ரீதியில் அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆட்டோவில் மருத்துவமனை அழைத்து சென்று இறுதிவரை உடனிருந்து பார்த்துக்கொண்டார். அவரின் மனித நேயத்தை கண்டதும் சுற்றியிருந்த பொதுமக்கள் அவரை மனதார பாராட்டினர் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வலிப்பு வந்த அந்தப் பெண் துடித்தபடி இருந்தார். அவரை ஆட்டோவில் ஏற்றவும், பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் டாக்டர் ஜெயவர்த்தன் உதவினார். இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}