டெல்லி: அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் குமரிக் கடலின் சில பகுதிகளில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக மே 21ம் தேதி இங்கு தென் மேற்குப் பருவ மழை தொடங்கும். ஆனால் தற்போது 3 நாட்களுக்கு முன்பாகவே மழை தொடங்கி விட்டது. இந்த மழையானது படிப்படியாக கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா என்று பரவி நாடு முழுவதும் பரவலாக பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மே 31ம் தேதி வாக்கில் கேரளாவில் பருவ மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதே அங்கு நல்ல மழை பெய்து வருகிறது.
மாலத்தீவு, குமரிக் கடல் பகுதிகள், நிக்கோபார் தீவுகள், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கமான மழையை விட கூடுதலான மழைப்பொழிவு இந்த சீசனில் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கோடை மழை குறைவுதான்
என்னதான் சமீப நாட்களாக நல்ல மழை பெய்து வந்தாலும் கூட கோடை மழை இந்த முறை 17 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 1 முதல் இன்று வரை மொத்தம் 84.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் அது 101.4 மில்லி மீட்டராக இருக்க வேண்டும். அந்த வகையில் 17 சதவீதம் அளவுக்கு குறைவான மழையே இந்த கோடையில் நமக்குக் கிடைத்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}