செம்ம அப்டேட்.. தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்குமாம்.. வானிலை ஆய்வு மையம்!

May 14, 2024,06:41 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்குப் பருவ மழை முன்கூட்டியே மே 19 இல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது தவிர கர்நாடகா மற்றும் கேரளாவிலும் இன்று முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம்.


தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது கோடை கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் சாதகமான காலநிலை நிலவி வருகிறது. குமரி கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்னும் ஐந்து தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.




இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை, நல்ல மழை கொடுக்கக் கூடிய காலநிலை. இந்த தென்மேற்கு பருவ மழை ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாத காலம்  நீடிக்கும். இந்த தென்மேற்கு பருவ மழை முதலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தொடங்கி பின்னர் படிப்படியாக கேரளாவில் மழை பெய்ய ஆரம்பிக்கும். ஆனால் இந்த வருடம் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே  துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


அதன்படி தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடல், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவ மழை வரும் மே 19ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாம். அதனால் கேரளாவிலும் ஜூன் ஒன்றாம் தேதியே தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்க்கலாம். மேலும் இந்தப் பருவ மழை ஜூன் மத்தியில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


 கர்நாடகாவைப் பொறுத்தவரை இன்று முதல் 3 நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நீலகிரி திருநெல்வேலி கன்னியாகுமரி தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக கோவை மாவட்டம் மாக்கினாம்பட்டியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. பொள்ளாச்சி மற்றும் தூத்துக்குடியில் தலா 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.


கோவை மாவட்டம் ஆழியார், ஸ்ரீவில்லிபுத்தூர், நத்தம், வீரபாண்டி, நீலகிரி-பார்வுட் எஸ்டேட்டில் தலா ஆறு சென்டிமீட்டர் மழை பதிவானது. குமரி மாவட்டம் கலியல், மயிலாடி, கோவை மாவட்டம் சின்கோனாவில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்