திருவனந்தபுரம்: கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு ஊர்களில் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
வழக்கமாக ஜூன் 1ம் தேதிதான் கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கும். இந்த முறை முன்கூட்டியே மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல வட கிழக்கு இந்தியாவிலும் பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொச்சி, ஆலுவா, திருனவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்துல்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கொச்சியில் பெய்த கன மழையால் பல ஐடி பூங்காக்களில் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் 28ம் தேதி முதலே பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே பல நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அளவுக்கு பலத்த மழையும் பெய்துள்ளது. காக்கநாடு இன்போபார்க், ஆலுவா - எடப்பள்ளி பகுதிகளில் தண்ணீர் பெருமளவில் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமையிலிருந்தே நல்ல மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகாவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவைப் போலவே வட கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}