சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை அந்தமானில் நாளையே தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வந்து காலம் மாறி தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை நிலவி வருகிறது. ஜுன் மாதத்தில் தொடங்கும் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது அநேக இடங்களில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய கூடும். குறிப்பாக தென் மாவட்டங்களில் 12 முதல் 20 செமீ வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்குகிறது தென் மேற்குப் பருவ மழை
இதற்கிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவ மழை நாளை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் தான் தற்போது தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழைக் பெய்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்:
நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்
{{comments.comment}}