சென்னையில் 55 மின்சார ரயில்கள் ரத்து... மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு.. ஆகஸ்ட் 18 வரை ஓடாது!

Aug 12, 2024,06:40 PM IST

சென்னை :   தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தேதி ஆகஸ்ட் 14 ல் இருந்து ஆகஸ்ட் 18 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சென்னை கடற்கரை- தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 வரை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. ரத்து செய்யப்பட்டதற்கு மாறாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.




இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு, கடற்கரை - செங்கல்பட்டு-கடற்கரை இடையேயான புறநகர் ரயில்களின் சேவை ஆகஸ்ட் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 14 வரை இருந்த ரயில்கள் ரத்து, தற்போது ஆகஸ்ட் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


திருநெல்வேலி - செங்கோட்டை இடையேயான ரயில்வே பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை ரயில்கள் அனைத்தும் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை- செங்கோட்டை ரயில் சேவை தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்