சென்னை : தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தேதி ஆகஸ்ட் 14 ல் இருந்து ஆகஸ்ட் 18 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை- தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 வரை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. ரத்து செய்யப்பட்டதற்கு மாறாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு, கடற்கரை - செங்கல்பட்டு-கடற்கரை இடையேயான புறநகர் ரயில்களின் சேவை ஆகஸ்ட் 18ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 14 வரை இருந்த ரயில்கள் ரத்து, தற்போது ஆகஸ்ட் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி - செங்கோட்டை இடையேயான ரயில்வே பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை ரயில்கள் அனைத்தும் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை- செங்கோட்டை ரயில் சேவை தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}