சென்னை: 2025 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் இங்கு பிப்ரவரி மாதத்தில் கொண்டாடும் தைப்பூச திருவிழா மிகவும் விசேஷமானது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது.
முன்னதாக 2024-25 ஆம் ஆண்டிற்கான சக்தி மாலை இருமுடி தேதி டிசம்பர் 15, 2024 அன்று தொடங்கி பிப்ரவரி 10 வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூச விழா நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி தற்போது பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து இருமுடி சுமந்து கோயிலுக்கு வர துவங்கியுள்ளனர். இதற்காக பக்தர்களிள் சிரமத்தை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை ஒவ்வொரு வருடமும் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக இரண்டு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த வசதி பயனுள்ளதாக இருப்பதாக பக்தர்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர்.
அதேபோல் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூசம் மற்றும் இருமுடித் திருவிழாவை முன்னிட்டு வைகை எக்ஸ்பிரஸ் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தைப்பூசம் மற்றும் இருமுடி திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635) மேல்மருவத்தூரில் இரண்டு நிமிடங்கள் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த நடைமுறை இன்று அதாவது டிசம்பர் 28 முதல் பிப்ரவரி 11 வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!
{{comments.comment}}