சென்னை: 2025 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் இங்கு பிப்ரவரி மாதத்தில் கொண்டாடும் தைப்பூச திருவிழா மிகவும் விசேஷமானது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது.

முன்னதாக 2024-25 ஆம் ஆண்டிற்கான சக்தி மாலை இருமுடி தேதி டிசம்பர் 15, 2024 அன்று தொடங்கி பிப்ரவரி 10 வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூச விழா நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி தற்போது பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து இருமுடி சுமந்து கோயிலுக்கு வர துவங்கியுள்ளனர். இதற்காக பக்தர்களிள் சிரமத்தை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை ஒவ்வொரு வருடமும் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக இரண்டு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த வசதி பயனுள்ளதாக இருப்பதாக பக்தர்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர்.
அதேபோல் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான தைப்பூசம் மற்றும் இருமுடித் திருவிழாவை முன்னிட்டு வைகை எக்ஸ்பிரஸ் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தைப்பூசம் மற்றும் இருமுடி திருவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635) மேல்மருவத்தூரில் இரண்டு நிமிடங்கள் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த நடைமுறை இன்று அதாவது டிசம்பர் 28 முதல் பிப்ரவரி 11 வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
நானாக என்னிடம் எதுவுமில்லை இப்போது!
புலரும் காலைப்பொழுதினிலே
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
{{comments.comment}}