சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலையொட்டி, ராமநாதபுரத்திலிருந்து தாம்பரம் ரயில் சந்திப்பு வரையிலான ஒரு வழி சிறப்பு ரயில் நவம்பர் 3ம் தேதி இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல லட்சம் பேர் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது தீபாவளி முடிந்துள்ள நிலையில் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கிறது. அதன் பின்னர் மக்கள் மீ்ண்டும் சென்னைக்குத் திரும்புவார்கள்.

சென்னை திரும்பும் பயணிகளின் நலனுக்காக சிறப்புப் பேருந்துகளும், ரயில்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ராமநாதபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு ஒரு வழி சிறப்பு ரயில் நவம்பர் 3ம் தேதி இயக்கப்படவுள்ளது. இதற்கான ரிசர்வேஷன் தொடங்கி விட்டது.
இந்த ரயில் ராமநாதபுரத்திலிருந்து நவம்பர் 3ம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும். அங்கிருந்து பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சிறப்பு ரயிலில், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 11 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், ஒரு லக்கேஜ் பெட்டி, 1 இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகள் பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}