சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலையொட்டி, ராமநாதபுரத்திலிருந்து தாம்பரம் ரயில் சந்திப்பு வரையிலான ஒரு வழி சிறப்பு ரயில் நவம்பர் 3ம் தேதி இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல லட்சம் பேர் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது தீபாவளி முடிந்துள்ள நிலையில் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கிறது. அதன் பின்னர் மக்கள் மீ்ண்டும் சென்னைக்குத் திரும்புவார்கள்.

சென்னை திரும்பும் பயணிகளின் நலனுக்காக சிறப்புப் பேருந்துகளும், ரயில்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ராமநாதபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு ஒரு வழி சிறப்பு ரயில் நவம்பர் 3ம் தேதி இயக்கப்படவுள்ளது. இதற்கான ரிசர்வேஷன் தொடங்கி விட்டது.
இந்த ரயில் ராமநாதபுரத்திலிருந்து நவம்பர் 3ம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும். அங்கிருந்து பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சிறப்பு ரயிலில், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 11 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், ஒரு லக்கேஜ் பெட்டி, 1 இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகள் பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}