சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலையொட்டி, ராமநாதபுரத்திலிருந்து தாம்பரம் ரயில் சந்திப்பு வரையிலான ஒரு வழி சிறப்பு ரயில் நவம்பர் 3ம் தேதி இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல லட்சம் பேர் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது தீபாவளி முடிந்துள்ள நிலையில் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கிறது. அதன் பின்னர் மக்கள் மீ்ண்டும் சென்னைக்குத் திரும்புவார்கள்.

சென்னை திரும்பும் பயணிகளின் நலனுக்காக சிறப்புப் பேருந்துகளும், ரயில்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ராமநாதபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு ஒரு வழி சிறப்பு ரயில் நவம்பர் 3ம் தேதி இயக்கப்படவுள்ளது. இதற்கான ரிசர்வேஷன் தொடங்கி விட்டது.
இந்த ரயில் ராமநாதபுரத்திலிருந்து நவம்பர் 3ம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும். அங்கிருந்து பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சிறப்பு ரயிலில், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 11 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், ஒரு லக்கேஜ் பெட்டி, 1 இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகள் பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}