சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலையொட்டி, ராமநாதபுரத்திலிருந்து தாம்பரம் ரயில் சந்திப்பு வரையிலான ஒரு வழி சிறப்பு ரயில் நவம்பர் 3ம் தேதி இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல லட்சம் பேர் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது தீபாவளி முடிந்துள்ள நிலையில் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கிறது. அதன் பின்னர் மக்கள் மீ்ண்டும் சென்னைக்குத் திரும்புவார்கள்.

சென்னை திரும்பும் பயணிகளின் நலனுக்காக சிறப்புப் பேருந்துகளும், ரயில்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ராமநாதபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு ஒரு வழி சிறப்பு ரயில் நவம்பர் 3ம் தேதி இயக்கப்படவுள்ளது. இதற்கான ரிசர்வேஷன் தொடங்கி விட்டது.
இந்த ரயில் ராமநாதபுரத்திலிருந்து நவம்பர் 3ம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும். அங்கிருந்து பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சிறப்பு ரயிலில், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 11 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், ஒரு லக்கேஜ் பெட்டி, 1 இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகள் பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Short Story: புதுமைப்பெண்!
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
{{comments.comment}}