சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் தீபாவளி கொண்டாட சென்ற பொதுமக்கள் இன்று இரவு மீண்டும் சென்னைக்குத் திரும்பவுள்ள நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையிலும், மக்கள் எளிதாக நகருக்குள் வரும் வகையிலும் சிறப்பு பாசஞ்சர் ரயில்களை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நாளை காலை இயக்கவுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் சென்றுள்ளனர். தீபாவளி விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் மக்கள் இன்று இரவு பெருமளவில் சென்னைக்குத் திரும்பவுள்ளனர். காலை முதலே மக்கள் சென்னைக்குக் கிளம்ப ஆரம்பித்து விட்டனர். இன்று இரவு வரும் ரயில்கள், பஸ்களில் பெருமளவிலான மக்கள் நாளை அதிகாலை சென்னை வந்து இறங்குவார்கள்.

இதையடுத்து பயணிகளின் நலனுக்காக, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வரை சிறப்பு பாசஞ்சர் ரயில்களை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் இயக்கவுள்ளது. இந்த ரயில்கள் அதிகாலை 4 மணி, 4.30, 5 மணி, 5.45, 6.20 ஆகிய நேரங்களில் இந்த ரயில்கள் தாம்பரத்திற்கு இயக்கப்படும். அனைத்து ரயில்களும் பொத்தேரி ரயில் நிலையத்தில் 5 நிமிடங்களுக்கு நிற்கும்.
அதேபோல தாம்பரத்திலிருந்து 2 சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் காலை 5.05 மற்றும் 5.40 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளுக்கு இந்த ரயில்கள் உதவியாக இருக்கும். இதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
விடியலைத் தாடி
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
{{comments.comment}}