சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் தீபாவளி கொண்டாட சென்ற பொதுமக்கள் இன்று இரவு மீண்டும் சென்னைக்குத் திரும்பவுள்ள நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையிலும், மக்கள் எளிதாக நகருக்குள் வரும் வகையிலும் சிறப்பு பாசஞ்சர் ரயில்களை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நாளை காலை இயக்கவுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் சென்றுள்ளனர். தீபாவளி விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் மக்கள் இன்று இரவு பெருமளவில் சென்னைக்குத் திரும்பவுள்ளனர். காலை முதலே மக்கள் சென்னைக்குக் கிளம்ப ஆரம்பித்து விட்டனர். இன்று இரவு வரும் ரயில்கள், பஸ்களில் பெருமளவிலான மக்கள் நாளை அதிகாலை சென்னை வந்து இறங்குவார்கள்.

இதையடுத்து பயணிகளின் நலனுக்காக, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வரை சிறப்பு பாசஞ்சர் ரயில்களை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் இயக்கவுள்ளது. இந்த ரயில்கள் அதிகாலை 4 மணி, 4.30, 5 மணி, 5.45, 6.20 ஆகிய நேரங்களில் இந்த ரயில்கள் தாம்பரத்திற்கு இயக்கப்படும். அனைத்து ரயில்களும் பொத்தேரி ரயில் நிலையத்தில் 5 நிமிடங்களுக்கு நிற்கும்.
அதேபோல தாம்பரத்திலிருந்து 2 சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் காலை 5.05 மற்றும் 5.40 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளுக்கு இந்த ரயில்கள் உதவியாக இருக்கும். இதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}