சென்னை திரும்பும் மக்களே.. காட்டாங்குளத்தூர் டூ தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் .. நாளை காலை waiting

Nov 03, 2024,04:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் தீபாவளி கொண்டாட சென்ற பொதுமக்கள் இன்று இரவு மீண்டும் சென்னைக்குத் திரும்பவுள்ள நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையிலும், மக்கள் எளிதாக நகருக்குள் வரும் வகையிலும் சிறப்பு பாசஞ்சர் ரயில்களை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நாளை காலை இயக்கவுள்ளது.


தீபாவளி பண்டிகைக்காக கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் சென்றுள்ளனர். தீபாவளி விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் மக்கள் இன்று இரவு பெருமளவில் சென்னைக்குத் திரும்பவுள்ளனர். காலை முதலே மக்கள் சென்னைக்குக் கிளம்ப ஆரம்பித்து விட்டனர். இன்று இரவு வரும் ரயில்கள், பஸ்களில் பெருமளவிலான மக்கள் நாளை அதிகாலை சென்னை  வந்து இறங்குவார்கள்.




இதையடுத்து பயணிகளின் நலனுக்காக, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வரை சிறப்பு பாசஞ்சர் ரயில்களை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் இயக்கவுள்ளது. இந்த ரயில்கள் அதிகாலை  4 மணி, 4.30, 5 மணி, 5.45, 6.20 ஆகிய நேரங்களில் இந்த ரயில்கள் தாம்பரத்திற்கு இயக்கப்படும். அனைத்து ரயில்களும் பொத்தேரி ரயில் நிலையத்தில் 5 நிமிடங்களுக்கு நிற்கும்.


அதேபோல தாம்பரத்திலிருந்து 2 சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் காலை 5.05 மற்றும் 5.40 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளுக்கு இந்த ரயில்கள் உதவியாக இருக்கும். இதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்