கும்பாபிஷேகம், தைப்பூசம் எதிரொலி.. பழனிக்கு 5 நாட்கள் சிறப்பு ரயில்கள்

Jan 27, 2023,10:10 AM IST
மதுரை: பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் தொடக்க விழாவையொட்டி பழனிக்கு 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.



பழனியில் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பழனிக்கு மதுரை, திண்டுக்கல், கோவையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நேற்று முதல் இவை தொடங்கியுள்ளன.

மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடையும்.

பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.

கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்து சேரும். மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் போய்ச் சேரும். 

திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.55 மணிக்கு பழனி வந்து சேரும். மறுமார்க்கத்தில், 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவையை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்