கும்பாபிஷேகம், தைப்பூசம் எதிரொலி.. பழனிக்கு 5 நாட்கள் சிறப்பு ரயில்கள்

Jan 27, 2023,10:10 AM IST
மதுரை: பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் தொடக்க விழாவையொட்டி பழனிக்கு 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.



பழனியில் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பழனிக்கு மதுரை, திண்டுக்கல், கோவையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நேற்று முதல் இவை தொடங்கியுள்ளன.

மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடையும்.

பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.

கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்து சேரும். மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் போய்ச் சேரும். 

திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.55 மணிக்கு பழனி வந்து சேரும். மறுமார்க்கத்தில், 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவையை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்