24 மணி நேரத்தில் 932 மில்லி மீட்டர்.. வரலாறு காணாத பேய் மழை.. நீரில் மிதக்கும் காயல்பட்டனம்!

Dec 18, 2023,09:14 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நீரில் மிதக்கிறது. இதற்குக் காரணம் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 932 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து தீர்த்ததுதான்.


ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் காயல் பட்டனமே கடல் கொண்ட நகர் போல மாறிக் காட்சி தருகிறது. மொத்த ஊரில் நீரில் மிதக்கின்றது.


கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதீத மழைப் பொழிவைக் கண்டது காயல்பட்டனம்தான். கடந்த 1992ம் ஆண்டுக்குப் பிறகு 2வது அதிக அளவிலான மழைப் பொழிவு காயல்பட்டினத்தில்தான் பெய்துள்ளது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டு மாஞ்சோலைக்குட்பட்ட கக்காச்சி என்ற இடத்தில் 965 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.




கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் 618, திருச்செந்தூரில் 679 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பல ஊர்களில் 300 மில்லி மீட்டருக்கும் மேலான மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலேயே திருச்செந்தூர் தாலுகாவில்தான் அதீத மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதற்கு அடுத்த கன மழை சாத்தான்குளம், கோவில்பட்டி தாலுகாக்ககளில் பெய்துள்ளது.


தமிழ்நாட்டில் இதற்கு முன்பு 24 மணி நேரங்களில் அதிக அளவிலான மழைப் பொழிவை பெற்ற பகுதிகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளாகவே இருக்கும். ஆனால் நிலப்பரப்பில் மிகப் பெரிய அளவில் மழை கொட்டியது காயல்பட்டினத்தில்தான் முதல் முறையாகும்.


24 மணி நேரத்தில் 900 மில்லி மீட்டர் மழை இதற்கு முன்பு  2 முறை பெய்துள்ளது. 1992ல் கக்காச்சியில் 965 மில்லி மீட்டர், 2019ம் ஆண்டு அவலாஞ்சியில் 911 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.  800 மில்லி மீட்டருக்கும் மேலான மழை 3 முறை பதிவாகியுள்ளது. 1992ல் மாஞ்சோலை (821), 2009ல் கெட்டி (820), 2019ல் அவலாஞ்சி (820) பெய்துள்ளது.


இதுதவிர 1958ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 713 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 2008ம் ஆண்டு 656 மில்லி மீட்டர் மழை பெய்து வெள்ளக்காடாக்கியது.


சென்னை சுற்று வட்டாரத்தில் 2 முறை அதீத கன மழை கொட்டியுள்ளது. 1846ம் ஆண்டு நகர்ப் பகுதியில் 550 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல 1970ம் ஆண்டு மகாபலிபுரத்தில் 540 மில்லி மீட்டர் பெய்துள்ளது. எல்லா வகையிலும் காயல்பட்டனம் மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது. ஆனால் அது பெரும் சோதனையாக மாறியதுதான் வேதனை.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்