சென்னை: தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். சென்னையில் இன்று நள்ளிரவுக்கு மேல் மழை தொடங்கி காலை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடும் கோடை சற்று அடங்கி தற்போது ஆங்காங்கே மழை பெய்து பூமியின் வெட்கையைத் தணித்து மக்களைக் குளிர் வித்து வருகிறது. விரைவில் தென் மேற்குப் பருவ மழையும் தொடங்கும் என்பதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சுடன் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு சூப்பர் செய்தியை சொல்லியுள்ளார். அதாவது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டாஸ, கரூர், நாமக்கல், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
நாளையும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பா டெல்டா பகுதிகளில் நல்ல மழைக்கு மிகப் பெரிய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை இன்று நள்ளிரவுக்கு மேல் மழை தொடங்கி காலை வரை பெய்யலாம். நாளை அலுவலகம் செல்லும் போது குடையை எடுக்க மறக்காதீர்கள். ரெயின் கோட்டும் அவசியம். இன்னும் 2 - 3 நாட்களுக்கு அது தேவைப்படும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}