தமிழ்நாடு முழுக்க சூப்பர் மழை.. சென்னை மக்களே.. நாளைக்கு குடை தேவைப்படும்.. பிரதீப் ஜான்!

May 15, 2024,06:38 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். சென்னையில் இன்று நள்ளிரவுக்கு மேல் மழை தொடங்கி காலை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கடும் கோடை சற்று அடங்கி தற்போது ஆங்காங்கே மழை பெய்து பூமியின் வெட்கையைத் தணித்து மக்களைக் குளிர் வித்து வருகிறது. விரைவில் தென் மேற்குப் பருவ மழையும் தொடங்கும் என்பதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சுடன் உள்ளனர்.




இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு சூப்பர் செய்தியை  சொல்லியுள்ளார். அதாவது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டாஸ, கரூர், நாமக்கல், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.


நாளையும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பா டெல்டா பகுதிகளில் நல்ல மழைக்கு மிகப் பெரிய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.


சென்னையைப் பொறுத்தவரை இன்று நள்ளிரவுக்கு மேல் மழை தொடங்கி காலை வரை பெய்யலாம். நாளை அலுவலகம் செல்லும் போது குடையை எடுக்க மறக்காதீர்கள். ரெயின் கோட்டும் அவசியம். இன்னும் 2 - 3 நாட்களுக்கு அது தேவைப்படும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்