சென்னை: தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். சென்னையில் இன்று நள்ளிரவுக்கு மேல் மழை தொடங்கி காலை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடும் கோடை சற்று அடங்கி தற்போது ஆங்காங்கே மழை பெய்து பூமியின் வெட்கையைத் தணித்து மக்களைக் குளிர் வித்து வருகிறது. விரைவில் தென் மேற்குப் பருவ மழையும் தொடங்கும் என்பதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சுடன் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு சூப்பர் செய்தியை சொல்லியுள்ளார். அதாவது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டாஸ, கரூர், நாமக்கல், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
நாளையும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பா டெல்டா பகுதிகளில் நல்ல மழைக்கு மிகப் பெரிய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை இன்று நள்ளிரவுக்கு மேல் மழை தொடங்கி காலை வரை பெய்யலாம். நாளை அலுவலகம் செல்லும் போது குடையை எடுக்க மறக்காதீர்கள். ரெயின் கோட்டும் அவசியம். இன்னும் 2 - 3 நாட்களுக்கு அது தேவைப்படும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}