தமிழ்நாடு முழுக்க சூப்பர் மழை.. சென்னை மக்களே.. நாளைக்கு குடை தேவைப்படும்.. பிரதீப் ஜான்!

May 15, 2024,06:38 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். சென்னையில் இன்று நள்ளிரவுக்கு மேல் மழை தொடங்கி காலை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கடும் கோடை சற்று அடங்கி தற்போது ஆங்காங்கே மழை பெய்து பூமியின் வெட்கையைத் தணித்து மக்களைக் குளிர் வித்து வருகிறது. விரைவில் தென் மேற்குப் பருவ மழையும் தொடங்கும் என்பதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சுடன் உள்ளனர்.




இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு சூப்பர் செய்தியை  சொல்லியுள்ளார். அதாவது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டாஸ, கரூர், நாமக்கல், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.


நாளையும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பா டெல்டா பகுதிகளில் நல்ல மழைக்கு மிகப் பெரிய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.


சென்னையைப் பொறுத்தவரை இன்று நள்ளிரவுக்கு மேல் மழை தொடங்கி காலை வரை பெய்யலாம். நாளை அலுவலகம் செல்லும் போது குடையை எடுக்க மறக்காதீர்கள். ரெயின் கோட்டும் அவசியம். இன்னும் 2 - 3 நாட்களுக்கு அது தேவைப்படும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்