திருநெல்வேலி: பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்தார்கள். அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்து இறக்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து விவசாய சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில்,பாபநாசம் அணையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சுமார் 86,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. 400 கோடி ரூபாயில் 3 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்யும் அளவுக்கு குடோன்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தவெக மாநாட்டிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், நானும் வாழ்த்துச் சொல்லிக் கொள்கிறேன்.விஜய் கட்சி ஆரம்பித்ததில் யாருக்கும் ஆட்சேபனை கிடையாது. ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் விஜய்யும் கட்சி ஆரம்பித்துள்ளார். அதை நான் வரவேற்கின்றேன். திமுக பணம் சம்பாதிப்பதாக விஜய் சொல்லி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும் போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம்.
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவர் உடன் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அப்படி பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் அவர் எப்படி தவெக கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்று தெரியவில்லை. பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள். அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்து இருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
விஜய்யின் அப்பா,புஸ்ஸி ஆனந்த் பற்றி கூறும் போது, என் மகன் விஜய்யுடன் இருப்பவர்கள் கிரிமினல்கள் தான் என்று சொன்னார்.நான் சொல்லவில்லை.விஜய்யின் அப்பாதான் சொன்னார். அப்போது எதற்காக அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஒரு சமயம் கிரிமினல் இப்போது நல்ல ஆளாக மாறியிருக்கலாம். அதுவும் எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}