சென்னை: பஸ்களில் ஏறும் பயணிகள் லக்கேஜ்களை வைப்பதற்கு வசதியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மாநகர பேருந்துகளில் முன்னும் பின்னும் இரண்டு சீட்டுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய முனையம் கட்டப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயிரிடப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக பல்வேறு வசதிகளை சிஎம்டிஏ நிறுவனமும், எம்டிசி எனப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழகமும் ஏற்படுத்தி வருகின்றன. இங்கு குடிநீர், கழிவறை, திருநங்கைகளுக்கான கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான குறைவான உயரம் கொண்ட டிக்கெட் வாங்கும் இடம், கடைகள், ஏடிஎம்கள், தனி மருத்துவமனை, நகரும் படிக்கட்டுகள், ஓய்வறைகள், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கலைஞர் நூற்றாண்டு போக்குவரத்து முனையத்திற்காக புதிய ரயில் நிலையம் அமைக்கவும், அங்குள்ள பேருந்து நிலையத்தை ஆகாய நடைபாதை மூலமாக இணைக்கும் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதைகள் போன்றவையும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் மாநகரப் பேருந்துகளில் முன்னும் பின்னும் இரண்டு சீட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த காலி இடத்தில் பயணிகள் லக்கேஜ் வைப்பதற்கு வசதியாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பஸ்களில் ஏறுவோர் படிக்கட்டுக்கு அருகிலேயே லக்கேஜ்களை வைத்துக் கொண்டால் இறங்கும்போது சிரமமாக இருக்காது என்பதால் இந்த ஏற்பாடு. இந்திய புதிய ஏற்பாட்டுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}