சென்னை: பஸ்களில் ஏறும் பயணிகள் லக்கேஜ்களை வைப்பதற்கு வசதியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மாநகர பேருந்துகளில் முன்னும் பின்னும் இரண்டு சீட்டுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய முனையம் கட்டப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயிரிடப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதேபோல சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக பல்வேறு வசதிகளை சிஎம்டிஏ நிறுவனமும், எம்டிசி எனப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழகமும் ஏற்படுத்தி வருகின்றன. இங்கு குடிநீர், கழிவறை, திருநங்கைகளுக்கான கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான குறைவான உயரம் கொண்ட டிக்கெட் வாங்கும் இடம், கடைகள், ஏடிஎம்கள், தனி மருத்துவமனை, நகரும் படிக்கட்டுகள், ஓய்வறைகள், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கலைஞர் நூற்றாண்டு போக்குவரத்து முனையத்திற்காக புதிய ரயில் நிலையம் அமைக்கவும், அங்குள்ள பேருந்து நிலையத்தை ஆகாய நடைபாதை மூலமாக இணைக்கும் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதைகள் போன்றவையும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் மாநகரப் பேருந்துகளில் முன்னும் பின்னும் இரண்டு சீட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த காலி இடத்தில் பயணிகள் லக்கேஜ் வைப்பதற்கு வசதியாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பஸ்களில் ஏறுவோர் படிக்கட்டுக்கு அருகிலேயே லக்கேஜ்களை வைத்துக் கொண்டால் இறங்கும்போது சிரமமாக இருக்காது என்பதால் இந்த ஏற்பாடு. இந்திய புதிய ஏற்பாட்டுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}