சென்னை: பஸ்களில் ஏறும் பயணிகள் லக்கேஜ்களை வைப்பதற்கு வசதியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மாநகர பேருந்துகளில் முன்னும் பின்னும் இரண்டு சீட்டுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய முனையம் கட்டப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயிரிடப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக பல்வேறு வசதிகளை சிஎம்டிஏ நிறுவனமும், எம்டிசி எனப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழகமும் ஏற்படுத்தி வருகின்றன. இங்கு குடிநீர், கழிவறை, திருநங்கைகளுக்கான கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான குறைவான உயரம் கொண்ட டிக்கெட் வாங்கும் இடம், கடைகள், ஏடிஎம்கள், தனி மருத்துவமனை, நகரும் படிக்கட்டுகள், ஓய்வறைகள், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கலைஞர் நூற்றாண்டு போக்குவரத்து முனையத்திற்காக புதிய ரயில் நிலையம் அமைக்கவும், அங்குள்ள பேருந்து நிலையத்தை ஆகாய நடைபாதை மூலமாக இணைக்கும் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதைகள் போன்றவையும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் மாநகரப் பேருந்துகளில் முன்னும் பின்னும் இரண்டு சீட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த காலி இடத்தில் பயணிகள் லக்கேஜ் வைப்பதற்கு வசதியாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பஸ்களில் ஏறுவோர் படிக்கட்டுக்கு அருகிலேயே லக்கேஜ்களை வைத்துக் கொண்டால் இறங்கும்போது சிரமமாக இருக்காது என்பதால் இந்த ஏற்பாடு. இந்திய புதிய ஏற்பாட்டுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}