சென்னை: 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதிகளில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
78வது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக நாளை கொண்டாடப்பட உள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு, சனி மற்றும் ஞாயிறு என வார இறுதி நாட்கள் வருவதால் மக்கள் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வெளியூர் செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தினசரி இயக்கும் பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி இன்று மற்றும் ஆகஸ்ட் 16,17 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று 470 சிறப்பு பேருந்துகளும், ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம் தேதி 365 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை ,ஓசூர் ,ஆகிய பகுதிகளுக்கு இன்று 70 பேருந்துகளும் ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் 65 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இது தவிர பெங்களூர், திருப்பூர்,ஈரோடு, கோவையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் ஆகஸ்ட் 16 17 ஆகிய தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
பொது மக்கள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC மொபைல் ஆஃப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}