சென்னை: ஆயுதபூஜை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை-தூத்துக்குடி-நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தமிழகத்தில் வேலை நிமிர்த்தமாக மற்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து வசிக்கும் மக்கள் அதிகம். இவர்கள் இந்த பண்டிகை காலங்களில் தான் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வார்கள்.
இதனால், பண்டிகை நாட்களில் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆயுதபூஜை அக்டோபர் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அக்டோபர் 12 விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை என தொடர்ந்து மூன்று தினங்கள் வருகின்றன.
இந்த விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல அநேக நபர்கள் திட்டமிட்டுள்ளனர். ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகி உள்ளன.இதனால் தெற்கு ரயில்வே சென்னை-தூத்துக்குடி-நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜோலார்பேட்டை, சேலம்,கரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை வழியாக 17 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட உள்ளது.
அந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து 9ம் தேதி மாலை 7 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக 10ம் தேதி இரவு 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது. இதே போல அருப்புக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த ரயிலானது சென்னை எழும்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் சென்னையில் இருந்து 8ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக 9ந்தேதி மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படுகிறது.அதன்படி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}