கொழும்பு: உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அமி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்து விட்டது. முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடி வருகிறது. தொடர்ந்து தோல்விகளைக் குவித்து வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே இலங்கை அணி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. அரை இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பும் போய் விட்டது.
குறிப்பாக இந்தியாவுடன் விளையாடியபோது இலங்கை அணி மிக மிக மோசமாக விளையாடியது. ரன் எடுக்கவே தடுமாறியது. இது ரசிகர்களை பெரும் அப்செட்டாக்கி விட்டது. இந்த நிலையில், இலங்கை அரசு, கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விட்டது. முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியமான அர்ஜூன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே வெளியிட்டுள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம் வருமாறு:
அர்ஜூன ரணதுங்கா (சேர்மன்)
எஸ்.ஐ. இமாம் (ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி)
ரோஹினி மாரசிங்கே (ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி)
இரங்கினி பெரேரா (ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி)
உபாலி தர்மதேசா
ரகிதா ராஜபக்சே
ஹிஷாம் ஜமால்தீன்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}