"எல்லாத்தையும் கலைங்க"..  இலங்கை கிரிக்கெட் போர்டு அதிரடி டிஸ்மிஸ்.. இடைக்கால குழு அமைப்பு!

Nov 06, 2023,10:21 AM IST

கொழும்பு: உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அமி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்து விட்டது. முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடி வருகிறது. தொடர்ந்து தோல்விகளைக் குவித்து வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே இலங்கை அணி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. அரை இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பும் போய் விட்டது. 


குறிப்பாக இந்தியாவுடன் விளையாடியபோது இலங்கை அணி மிக மிக மோசமாக விளையாடியது. ரன் எடுக்கவே தடுமாறியது. இது ரசிகர்களை பெரும் அப்செட்டாக்கி விட்டது. இந்த நிலையில், இலங்கை அரசு, கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விட்டது. முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியமான அர்ஜூன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.




இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே வெளியிட்டுள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம் வருமாறு:


அர்ஜூன ரணதுங்கா (சேர்மன்)

எஸ்.ஐ. இமாம் (ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி)

ரோஹினி மாரசிங்கே (ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி)

இரங்கினி பெரேரா (ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி)

உபாலி தர்மதேசா

ரகிதா ராஜபக்சே

ஹிஷாம் ஜமால்தீன்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்