கொழும்பு: உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அமி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்து விட்டது. முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடி வருகிறது. தொடர்ந்து தோல்விகளைக் குவித்து வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே இலங்கை அணி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. அரை இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பும் போய் விட்டது.
குறிப்பாக இந்தியாவுடன் விளையாடியபோது இலங்கை அணி மிக மிக மோசமாக விளையாடியது. ரன் எடுக்கவே தடுமாறியது. இது ரசிகர்களை பெரும் அப்செட்டாக்கி விட்டது. இந்த நிலையில், இலங்கை அரசு, கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விட்டது. முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியமான அர்ஜூன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே வெளியிட்டுள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம் வருமாறு:
அர்ஜூன ரணதுங்கா (சேர்மன்)
எஸ்.ஐ. இமாம் (ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி)
ரோஹினி மாரசிங்கே (ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி)
இரங்கினி பெரேரா (ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி)
உபாலி தர்மதேசா
ரகிதா ராஜபக்சே
ஹிஷாம் ஜமால்தீன்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}