கொழும்பு: உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அமி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்து விட்டது. முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடி வருகிறது. தொடர்ந்து தோல்விகளைக் குவித்து வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே இலங்கை அணி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. அரை இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பும் போய் விட்டது.
குறிப்பாக இந்தியாவுடன் விளையாடியபோது இலங்கை அணி மிக மிக மோசமாக விளையாடியது. ரன் எடுக்கவே தடுமாறியது. இது ரசிகர்களை பெரும் அப்செட்டாக்கி விட்டது. இந்த நிலையில், இலங்கை அரசு, கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விட்டது. முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியமான அர்ஜூன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே வெளியிட்டுள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம் வருமாறு:
அர்ஜூன ரணதுங்கா (சேர்மன்)
எஸ்.ஐ. இமாம் (ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி)
ரோஹினி மாரசிங்கே (ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி)
இரங்கினி பெரேரா (ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி)
உபாலி தர்மதேசா
ரகிதா ராஜபக்சே
ஹிஷாம் ஜமால்தீன்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}