- ஸ்வர்ணலட்சுமி
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய இரத பந்தம் குறித்து இன்று பார்க்கப் போகிறோம்.
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், சித்திரக்கவியில் மிகவும் வல்லவர். இவர் நம் தெய்வ மொழியான தமிழ் மொழியில் பல பாடல்கள் எழுதி உள்ளார். அழகர் முருகனைப் பற்றி பாடுவதில் பாம்பன் சுவாமிகள் மிகவும் வல்லவர்.
அவர் தனது பாடல்களில் சுப்பிரமணிய தத்துவத்தையும் அதன் மேன்மையும் தெளிவுற விளக்கியுள்ளார். அனுதினமும் அழகுத் தமிழால் அழகன் முருகனை பாடி பாடி ஆனந்தம் அடைந்தவர் பாம்பன் சுவாமிகள். இவர் அருளிய மொத்த பாடல்களின் எண்ணிக்கை 6666 என்கின்றனர். இந்த பாடல்கள் அனைத்தும் பக்தர்களுக்கு எல்லா நலன்களையும் அருளும் மகா மந்திரம்.

பாம்பன் சுவாமிகள் எழுதிய குறிப்பிட்ட பாடல்கள் மூலம் குறிப்பிட்ட காரியங்கள் சித்தியாகும் என்பதே பக்தர்களின் அனுபவமாக அமைந்துள்ளது. இவற்றுள் முக்கியமான ஒன்று இரத பந்தம்.
இதனை நாம் நெடுதூர பயணம் மேற்கொள்ளும் போது 27 முறை பாராயணம் செய்வதால் நமது பயணம் வெற்றி அடையும். நம் பயணம் பாதுகாப்பாக அமையும். நம்மால் இதனை படிக்க நேரமில்லை எனில் மொபைல் போனில் கூட கேட்கலாம்
இனி இரத பந்தம் பாடலைப் பார்ப்போம்
பதம் பிரித்தது
இருள் பொருதா வம்பலச்
சித்தென்னுமுரு கா நீடிரு
விண்ணோர் தேடு மருந்தே
மாண் பொருவாச்சீர்
தேசுதருஞ் செந்தி நறந் தீர்த்த
விற லோங்கு சிதாவா
சிறந்தத மாவின் பருள்
பாம்பன் சுவாமிகளின் சக்தி வாய்ந்த இரத பந்தம் நாம் தூரப் பயணம் மேற்கொள்ளும்போது நமது பயணம் பாதுகாப்பாக அமைய 27 முறை பாராயணம் செய்யுங்கள்.
வாழ்க வளமுடன்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}