திருவண்ணாமலை: பழங்குடியினத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி என்பவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம், பழங்குடியினத்திலிருந்து நீதிபதியான முதல் பெண் என்ற பெருமையை படைத்துள்ளார் ஸ்ரீமதி.
தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பழங்குடியின மக்கள் 40% பேர் வாழ்ந்து வருகின்றனர். இதில் மலைக்குறவர், இருளர், காடர், தோடர் உள்ளிட்ட 40 வகையான பழங்குடியின மக்கள் உள்ளன. இவர்கள் காடும் நிலமும் சார்ந்த பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் உடை, பேச்சு, உணவு போன்ற அனைத்திலும் தனிக் கலாச்சார பாரம்பரியப் பின்னணியுடன் வாழ்ந்து வாழ்கின்றனர்.
பழங்குடியின மக்களை உயர்த்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல திட்டங்கள், சலுகைகள் அவர்களுக்காக அமல்படுத்தப்பட்டு வருகிறது. பழங்குடியின இன மக்களும் பல்வேறு துறைகளில் சாதித்தும் வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைக்கு அருகே உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (23) புதிய வரலாறு படைத்துள்ளார். இவர் பழங்குடியின பெண். இவருடைய கணவர் வெங்கட்ராமன்.

ஸ்ரீபதி, கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். தமிழ் வழியில் கல்வி பயின்று முதன்முதலாக பழங்குடியின வகுப்பிலிருந்து நீதிபதியாக ஆகி புதிய சகாப்தம் படைத்துள்ளார் ஸ்ரீபதி.
புலியூர் கிராமம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள ஊராகும். அங்கு பல வசதிகள் கிடையாது. குறிப்பாக சரியான சாலை கூட இல்லை. இந்த சூழ்நிலையிலும் ஸ்ரீமதி பல தடைகளையும் தாண்டி படித்து தேர்வில் வெற்றி பெற்று ஜவ்வாது மலையின் முதல் பெண் நீதிபதியாக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி தேர்வு வெற்றி பெற்ற பழங்குடி பெண் ஸ்ரீபதி விரைவில் ஆறு மாத பயிற்சிக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நீதிபதி தேர்தல் வெற்றி பின் சொந்த ஊருக்கு திரும்பிய ஸ்ரீபதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் இவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியெல்லாம் ஸ்ரீபதிக்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் உதகை மாவட்டம் அருகங்காடு பகுதியில் வாழ்ந்து வரும் நீத்து (வயது 18) என்ற மாணவி கடந்த ஆண்டு நீட் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஸ்ரீபதியின் சாதனை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!
பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!
“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல
நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!
பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்
னேறவேண் டும்வைய மேலே!”
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}