காபியால் வரும் படபடப்பு, சோர்வு இல்லாமல் நாள் முழுவதும் எனர்ஜியுடன் இருக்க நிறைய பானங்கள் உள்ளன. காபி தரும் அதே எனர்ஜியை இவையும் தரும். உற்சாக இருக்கவும் உங்களுக்கு இவை உதவும்.
துளசி இஞ்சி டீ, ராகி கஞ்சி, நெல்லிக்காய் ஜூஸ், தேங்காய் தண்ணீர் மற்றும் சியா விதைகள், மசாலா சாஸ், அஸ்வகந்தா பேரீட்சை ஸ்மூத்தி, சத்து சர்பத், கீரை மற்றும் முருங்கைக்காய் ஸ்மூத்தி ஆகியவை பற்றித்தான் இப்போது நாம் பேசப் போகிறோம்.
காலை நேரத்தில் காபி குடிப்பதை தவிர்க்க நினைக்கிறீர்களா? காபிக்கு பதிலாக இயற்கையான பானங்களை குடிக்கலாம். அவை உடலுக்கு ஆரோக்கியத்தையும், எனர்ஜியையும் தரும். காபியால் ஏற்படும் படபடப்பு போன்ற தொந்தரவுகள் இருக்காது.

துளசி மற்றும் இஞ்சி டீ ஒரு சிறந்த பானம். இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். "துளசி இலைகள் மற்றும் துருவிய இஞ்சியை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். ஐந்து நிமிடம் கழித்து, சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம்" என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.
ராகி கஞ்சி உடலுக்கு கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்களை தருகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் எனர்ஜியைத் தருகிறது. ராகி மாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து கஞ்சியாக காய்ச்சவும். வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து சுவை கூட்டவும். பழங்களை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சத்தான காலை உணவு இது.
நெல்லிக்காய் ஜூஸ் உடலுக்கு வைட்டமின் C தருகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தும். உடலை சுத்தப்படுத்தும். காபியை விட இது சிறந்த எனர்ஜி பானம். நெல்லிக்காய் ஜூஸில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கலாம்.
தேங்காய் தண்ணீரில் சியா விதைகளை ஊறவைத்து குடிக்கலாம். இது உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை தருகிறது. இது நாள் முழுவதும் எனர்ஜியுடன் இருக்க உதவும். கவனத்தை சிதறாமல் ஒருமுகப்படுத்தவும் இது உதவும்.

மசாலா சாஸ் ஒரு புரோபயாடிக் நிறைந்த பானம். தயிரில் சீரகப் பொடி, உப்பு, புதினா இலைகள் மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கவும். இது செரிமானத்திற்கு உதவும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், காபிக்கு பதிலாக புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் இருக்கும்.
அஸ்வகந்தா மற்றும் பேரீட்சை ஸ்மூத்தி மன அழுத்தத்தை குறைக்கும். பாலில் அஸ்வகந்தா பொடி, பேரீட்சை மற்றும் வாழைப்பழம் சேர்த்து அரைக்கவும். இது இனிப்பான சுவையுடன் உடலுக்கு எனர்ஜியையும் தரும்.
சத்து சர்பத் ஒரு பாரம்பரிய பானம். இது தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. இது உடலுக்கு தேவையான எனர்ஜியை படிப்படியாக வெளியிடும். சத்து மாவை தண்ணீரில் கலந்து, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி மற்றும் வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
கீரை மற்றும் முருங்கைக்காய் ஸ்மூத்தி ஒரு சத்தான பானம். இதில் வாழைப்பழம், கீரை, ஓட்ஸ் மற்றும் முருங்கைக்காய் பொடி சேர்க்கப்படுகிறது. இது உடலுக்கு தேவையான எனர்ஜி, இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்களை தருகிறது. இது ஒரு ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானம்.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}