காபியால் வரும் படபடப்பு, சோர்வு இல்லாமல் நாள் முழுவதும் எனர்ஜியுடன் இருக்க நிறைய பானங்கள் உள்ளன. காபி தரும் அதே எனர்ஜியை இவையும் தரும். உற்சாக இருக்கவும் உங்களுக்கு இவை உதவும்.
துளசி இஞ்சி டீ, ராகி கஞ்சி, நெல்லிக்காய் ஜூஸ், தேங்காய் தண்ணீர் மற்றும் சியா விதைகள், மசாலா சாஸ், அஸ்வகந்தா பேரீட்சை ஸ்மூத்தி, சத்து சர்பத், கீரை மற்றும் முருங்கைக்காய் ஸ்மூத்தி ஆகியவை பற்றித்தான் இப்போது நாம் பேசப் போகிறோம்.
காலை நேரத்தில் காபி குடிப்பதை தவிர்க்க நினைக்கிறீர்களா? காபிக்கு பதிலாக இயற்கையான பானங்களை குடிக்கலாம். அவை உடலுக்கு ஆரோக்கியத்தையும், எனர்ஜியையும் தரும். காபியால் ஏற்படும் படபடப்பு போன்ற தொந்தரவுகள் இருக்காது.

துளசி மற்றும் இஞ்சி டீ ஒரு சிறந்த பானம். இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். "துளசி இலைகள் மற்றும் துருவிய இஞ்சியை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். ஐந்து நிமிடம் கழித்து, சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம்" என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.
ராகி கஞ்சி உடலுக்கு கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்களை தருகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் எனர்ஜியைத் தருகிறது. ராகி மாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து கஞ்சியாக காய்ச்சவும். வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து சுவை கூட்டவும். பழங்களை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சத்தான காலை உணவு இது.
நெல்லிக்காய் ஜூஸ் உடலுக்கு வைட்டமின் C தருகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தும். உடலை சுத்தப்படுத்தும். காபியை விட இது சிறந்த எனர்ஜி பானம். நெல்லிக்காய் ஜூஸில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கலாம்.
தேங்காய் தண்ணீரில் சியா விதைகளை ஊறவைத்து குடிக்கலாம். இது உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை தருகிறது. இது நாள் முழுவதும் எனர்ஜியுடன் இருக்க உதவும். கவனத்தை சிதறாமல் ஒருமுகப்படுத்தவும் இது உதவும்.

மசாலா சாஸ் ஒரு புரோபயாடிக் நிறைந்த பானம். தயிரில் சீரகப் பொடி, உப்பு, புதினா இலைகள் மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கவும். இது செரிமானத்திற்கு உதவும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், காபிக்கு பதிலாக புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் இருக்கும்.
அஸ்வகந்தா மற்றும் பேரீட்சை ஸ்மூத்தி மன அழுத்தத்தை குறைக்கும். பாலில் அஸ்வகந்தா பொடி, பேரீட்சை மற்றும் வாழைப்பழம் சேர்த்து அரைக்கவும். இது இனிப்பான சுவையுடன் உடலுக்கு எனர்ஜியையும் தரும்.
சத்து சர்பத் ஒரு பாரம்பரிய பானம். இது தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. இது உடலுக்கு தேவையான எனர்ஜியை படிப்படியாக வெளியிடும். சத்து மாவை தண்ணீரில் கலந்து, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி மற்றும் வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
கீரை மற்றும் முருங்கைக்காய் ஸ்மூத்தி ஒரு சத்தான பானம். இதில் வாழைப்பழம், கீரை, ஓட்ஸ் மற்றும் முருங்கைக்காய் பொடி சேர்க்கப்படுகிறது. இது உடலுக்கு தேவையான எனர்ஜி, இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்களை தருகிறது. இது ஒரு ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானம்.
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}