தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Jan 30, 2026,06:17 PM IST

சென்னை: தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு. கொஞ்சம் கூட அருவருப்பு பார்க்காமல் நமது சுற்றுப்புறக் குப்பைகளையும் கழிவுகளையும் கைகளால் அகற்றும் நல்ல உள்ளங்களுக்குத் திமுக அரசு காட்டும் நன்றிக்கடன் இதுதானா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில், அறிவாலயம் அரசு சார்பாகத் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிக மோசமான தரத்தில் இருப்பதாகவும், அதை உண்பவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் வெளியிட்டுள்ள காணொளியைப் பார்க்கையில் மனம் வலிக்கிறது.




கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொட்டலங்களைக் குப்பை வண்டியில் கொண்டு வந்து இழிவுபடுத்தினார்கள், தற்போது திருநெல்வேலியில் கிட்டத்தட்ட கெட்டுப்போன உணவைக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறார்கள். கொஞ்சம் கூட அருவருப்பு பார்க்காமல் நமது சுற்றுப்புறக் குப்பைகளையும் கழிவுகளையும் கைகளால் அகற்றும் நல்ல உள்ளங்களுக்குத் திமுக அரசு காட்டும் நன்றிக்கடன் இதுதானா?


“சமூகநீதி” குறித்து பிறருக்கு வகுப்பெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களோ, அவரது புதல்வரோ, அல்லது ஏதேனும் ஒரு திமுக தலைவரோ தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு வழங்கும் உணவினை ஒருவாயாவது உண்பார்களா?


தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழி சொல்லுங்கள் எனக் கேட்கும் தூய்மைப் பணியாளர்களைத் தரமற்ற உணவைக் கொடுத்து மடைமாற்றி விடலாம் என நினைக்கும் திமுக அரசு எத்தகைய குரூர மனம் படைத்த நிர்வாகமாக இருக்கவேண்டும்? என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்