அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவன்.. ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

Nov 21, 2024,03:48 PM IST

சென்னை: அமரன் படத்தினால் மனஉளைச்சலுக்கு ஆளான பொறியியல் மாணவர் ரூ.1.1 கோடி நஷ்டஈடு கேட்டு அமரன் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்த கதையாகும். இத்திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆனநிலையில் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை இப்படம் 300 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது அமைந்துள்ளது.




இந்நிலையில் அமரன் திரைப்படத்தில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஒரு துண்டு சீட்டில் செல்போன் நம்பரை எழுதி தூக்கி வீசுவது போன்ற காட்சி ஒன்று படத்தில் இடம் பெற்றிருக்கும். அந்தக் காட்சியில் செல்போன் எண்ணும் காட்டப்பட்டிருக்கும். நிஜத்தில் அந்த எண் வைத்திருப்பவர் பொறியியல் மாணவர் தான் வாகீசன் தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ளார். அந்த செல்பேன் நம்பருக்கு அடிக்கடி போன் கால் வருவதாகவும்,ரசிகர்கள் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வருவதாகவும் அவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.


தொடர்ந்து போன் வருவதால், தன்னால் அன்றாட வாழ்க்கையை கூட நிம்மதியாக கடக்க முடியவில்லை என்றும் வாகீசன் தெரிவித்துள்ளார். வெளியில் செல்வதற்கு காரை முன்பதிவு செய்யக்கூட இயலாதவாறு தொடர்ந்து போன் வருவதாகவும், சரியாக படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவுமு் கூறியுள்ளார். மேலும், படக்குழுவினரை குறிப்பிட்டு, ரசிகர்களின் தொந்தரவினால் எனது சொல்போன் எண்ணை மாற்ற முடியாது. ஆதார், வங்கி உள்ளிட்ட சில முக்கியமானவற்றிற்கு இந்த எண் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்  படத்தில் தெரியும் எண்ணை மறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 


இதுதவிர அமரன் படக்குழுவிற்கு ரூ.1 கோடியே 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வாகீசன் தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்