சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பள்ளி திறக்கும் முதல் நாளே தமிழக அரசின் சார்பாக சர்க்கரைப் பொங்கல் வழங்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளிலும் இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று சக்கரை பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. அது போலவே இனி வரும் காலங்களில் ஜூன் 3-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சத்துணவு மற்றும் குழந்தைகள் மையங்களில் சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வருடம் ஜூன் மூன்றாம் தேதி குழந்தைகளுக்கு பள்ளி திறக்கவில்லை. ஏனெனில் வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் சத்துணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் குழந்தைகளுக்கு ஜூன் மூன்றாம் தேதி சர்க்கரை பொங்கல் வழங்க முடியவில்லை. மாறாக ஜூன் 10ஆம் தேதி அதாவது இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.
இதையடுத்து இன்றே சர்க்கரைப் பொங்கலை தருமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் நாளாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அரசின் சார்பில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சர்க்கரைப் பொங்கலை வழங்கினார்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}