சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பள்ளி திறக்கும் முதல் நாளே தமிழக அரசின் சார்பாக சர்க்கரைப் பொங்கல் வழங்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளிலும் இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று சக்கரை பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. அது போலவே இனி வரும் காலங்களில் ஜூன் 3-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சத்துணவு மற்றும் குழந்தைகள் மையங்களில் சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த வருடம் ஜூன் மூன்றாம் தேதி குழந்தைகளுக்கு பள்ளி திறக்கவில்லை. ஏனெனில் வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் சத்துணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் குழந்தைகளுக்கு ஜூன் மூன்றாம் தேதி சர்க்கரை பொங்கல் வழங்க முடியவில்லை. மாறாக ஜூன் 10ஆம் தேதி அதாவது இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.
இதையடுத்து இன்றே சர்க்கரைப் பொங்கலை தருமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் நாளாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அரசின் சார்பில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சர்க்கரைப் பொங்கலை வழங்கினார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}