டெல்லி: அதானியால் எந்த லாபமும் இனி இல்லை என்பதால், அவரை மெதுவாக கை கழுவப் போகிறது பிரதமர் மோடி அரசு என்று கூறியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி.
அதானி நிறுவனம் தொடர்பாக அமெரிக்காவின் ஹின்டர்பர்க் நிறுவனம் சரமாரி புகார்களையும், குற்றச்சாட்டுக்களையும் வைத்ததைத் தொடர்ந்து அதானி குழுமம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளது. பங்குச் சந்தையின் அதன் பங்குகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன. உலகப் பணக்காரர்கள் வரிசையில் 15வது இடத்துக்குப் போய்விட்டார் அதானி.
வேகமாக மேலேறி வந்த அதானி இப்போது அதை விட பல மடங்கு வேகத்தில் பின்னோக்கி போக ஆரம்பித்து விட்டார். அதானி நிறுவனம் என்னாகுமோ என்ற பரபரப்பில் தொழில்துறை உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி அரசு, அதானியைக் கை கழுவ ஆரம்பித்துள்ளதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சாமி போட்டுள்ள டிவீட்டில், அதானி தொடர்பான பாஜகவின் நம்பிக்கை போய் விட்டது. எனவே அவரை மோடி அரசு மெதுவாக கை கழுவ ஆரம்பித்து விட்டதாக நான் கருதுகிறேன். லகுவாக வந்தது லகுவாக போய்விடும் என்று கூறியுள்ளார் சாமி.
இன்னொரு டிவீட்டில், உடனடியாக அதானி சொத்துக்களை தேசியமயமாக்கி விட வேண்டும். அதன் பிறகு அவற்றை ஏலத்தில்விட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}